Tuesday, November 5, 2013

ஏன் இந்த பில்டப்! ஏன் இந்த பித்தலாட்டம்


oct 04/2013: ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது. 

மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது. ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர். 

ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன? சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த டைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது. 

கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எவ்வித மாயா ஜாலங்களை எல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது. அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர். உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான். 

ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியை சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம். இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார். 

மேலும் பச்சைமுத்து என்ற சாதிக்கட்சி நடத்தும் பாரி வேந்தர் கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர்தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும். நாம் அறை கூவலாகவே சொல்லளாம். அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாமும் ஆதரிக்களாம். அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்களாம். 

ஹிஜ்ரத்தும் ம அல் ஹிஜ்ராவும்


அல்லாஹ்வின் பேருதவியால் ம அல் ஹிஜ்ராவுடன் 1434 வருடங்களை கடந்து 1435 தொட்டிருக்கிறது. இடம் பெயர்தல் என்ற அர்த்தத்திலான இவ்வருடக் கணக்கு, முதல் இடம் பெயர்தலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா விலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்ததிலிருந்து ஆரம்பமாகிறது.
சோதனையில் உச்சத்தில் ஆரம்பமான அப்பயணம் 1434 ஆண்டுகளைக்கடந்தும் பல சோதனைகளினூடே தன் பயணத்தை தொடர்கிறது.
உயிர் வாழ இடம் பெயர்தல், உழைத்துப் பிழைக்க இடம் பெயர்தல், உயர்வைத் தேடி இடம் பெயர்தல் என எத்தனையோ இடம் பெயர்தல் சரித்திரத்தில் உண்டு. ஆனால் என் கொள்கை பிழைக்க வேண்டும். அதை பிழைக்க வைக்க நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே முதல் இடம் பெயர்தல் (ஹிஜ்ரத்) நிகழ்ந்தது.
இஸ்லாமியத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் இந்த ஹிஜ்ரத் தன் தடங்களை பதித்ததுண்டு. ஆரம்பத்தில் தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்த முஸ்லிம்களை எங்கோ இருந்த பாரஸிக, ரோம வல்லரசுகள், “இவர்கள் இருக்கும் வரை நம் வல்லரசு நாட்டாண்மை நிலைக்காதுஎன பயந்து அடர்ந்தேறிய போது, அவர்களை எதிர்கொள்ளவும் முஸ்லிம்களின் நாடு கடந்த ஹிஜ்ரத் தொடர்ந்ததுண்டு.
சொந்த வாழ்வில் பிரச்னைகளால் சூழப்பட்ட எத்தனையோ சஹாபாக்கள் அமைதியைத் தேடிக்கூட இடம் பெயர்ந்த வரலாறு கள் உண்டு. இடம் பெயர்தல் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியா வசியமானது. தேவையற்ற நேரங்களில் இடம் பெயர்பவனும், அவசியமான நேரத்தில் இடம் பெயராமல் சொந்த பூமி, சொந்த வீடு தத்துவம் பேசித் திரிபவனும் உருப்படியாக வாழ முடியாது.
கலாச்சாரங்கள், நாகரிகங்கள் என்ற பெருமைகள் கூட இடம் பெயர்ந்த மனிதர்களால் அறியப்பட்டு, உணரப்பட்டு பரவலானது தான். மலேஷிய கலாச்சாரம் என்பது மூன்று இனங்களின் கலவையாகவே (மலாய் இந்திய சீன) அறியப்படுவதற்கு, எங்கேயோ இருந்து இடம் பெயர்ந்து வந்து மலேஷியாவை வளப்படுத்திய மறுக்க முடியாத மக்களான  இந்திய, சீன மக்களும் காரணம். 
கொள்கைகளை உயிர் வாழவைக்க ஆரம்பித்த இஸ்லாத்தின் ஹிஜ்ரத் இன்று சொந்த நாட்டிலேயே அகதியாய் ஒரு இடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்து உயிர் வாழும் போராட்டமாய் முஸ்லிம்களின் வாழ்வு ஊசலாடிக் கொண்டி ருக்கும் நிலையில் புதிய ஹிஜ்ரத் 1435 ஒரு விடியலாக அமையட்டும்.
காலப்போக்கில் மறைந்து கொண்டிருக்கும் மலேஷியாவின் தமிழ் முஸ்லிம் மக்களின் கலாச்சார ஒழுக்க மாண்மியங்கள் புதுப்பொலிவு பெறட்டும். கலப்படமற்ற இஸ்லாமிய நடவடிக்கைகள் நம் வாழ்வில் ஒளியேற்றட்டும்.
ம அல் ஹிஜ்ரா வாழ்த்துக்கள்!!! 

ஹிஜ்ரத் ஒரு வெற்றிப்படிக்கட்டு


அல்லாஹ்வின் பேருதவியால் ஹிஜ்ரா ஆண்டு  1434 வருடங்களை கடந்து 1435 ஐ தொட்டிருக்கிறது. இடம் பெயர்தல் என்ற அர்த்தத்திலான இவ்வருடக் கணக்கு, சோதனையில் உச்சத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்த ஒவ்வொரு ஹிஜ்ரத்தும் இஸ்லாத்தின் உயர்வை அடித்தளமாகக் கொண்டே காலடி வைத்தது.  தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்த முஸ்லிம்களை எங்கோ இருந்த பாரஸிக, ரோம வல்லரசுகள், “இவர்கள் இருக்கும் வரை நம் வல்லரசு நாட்டாண்மை நிலைக்காதுஎன பயந்து அடர்ந்தேறிய போது, அவர்களின் ஆளுமையில் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்த மக்களுக்கான அமைதிப்படையாக ஹிஜ்ரத் சென்றது.
ஸ்பெயினுக்கு மூஸப்னு நுழைர் என்ற மாவீரரின் தளபதியாக தாரிக் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, அவரின் பின்னே மூஸப்னு நுழைரும் தன் தளங்களை விரிவு படுத்திக்கொண்டே போனது கூட அம்மக்களின் விருப்பத்திற் கிணங்க விடுதலை தந்த அமைதிப்படையாகத்தான்.
இந்தியாவின் முதல் அரபுத் தளகர்த்தர் முஹம்மது பின் காஸிம், சிந்துவை ஆண்ட தாஹிர் என்ற சர்வாதிகாரிக்கெதிரான அமைதிப்படையாகவே ஹிஜ்ரத் செய்து வந்து வெற்றி கண்டார்.
முகலாய மன்னர் பாபர் ஆக்கிரமிக்க வந்தவரல்ல. இங்கிருந்த இப்ராஹிம் லோடி என்ற சர்வாதிகாரிக்கெதிராக இங்கிருந்த சிற்றரசர்களான ஹிந்து மன்னர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று அமைதி உருவாக்க வேண்டியதாலேயே.
முஸ்லிம்களின் ஒவ்வொரு ஹிஜ்ரத்தும் இஸ்லாமியத்தின் வெற்றிப்படிக்கட்டுகளாகவே இருந்தது.  முஸ்லிம்கள் அரபுலகம் விட்டு ஹிஜ்ரத்தின் பெயரால் நகர நகர அறிவொளி, ஆன்மிக ஒளி என முஸ்லிம்களின் சகல பரிமாணங்களையும் எல்லா நாடுகளும் உள்வாங்கிக்கொள்ளும்   அற்புதம் நிகழ்ந்தது.
வரலாற்றுக்கலை அஸ்மாவுர்ரிஜால் எனும் மனித மாண்புக்கோர்வையை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை ஹதீஸ்களை தரம் பிரிக்கும் ரசவாதக் கலையாக கையாண்ட போது உலகம் வியந்தது.
இயற்கை மருத்துவத்திலிருந்து இன்றைய மருத்துவம் வரை இஸ்லாமில் இல்லாத மருத்துவம் இல்லை என இப்னு சீனா கிளம்பி கானூனுத் திப்பு எனும் அகராதியை ஐரோப்பாவுக்கே பாடமாகத் தந்த போது முஸ்லிம்களின் மருத்துவ ஹிஜ்ரத் மாண்படைந்தது.
இஸ்லாம் விரிவடைய விரிவடைய முஸ்லிம்களின் ஹிஜ்ரத் கட்டிடக்கலையிலிருந்து, கல்விக்கலையின் சகல நுணுக்கங்களால் உலகளாவியது. முகலாயர்களின் வருகை கூட இந்தியாவின் சுவையையே மாற்றியமைத்தது என்பதை பிரியாணி சாப்பிடும் எவரும் மறக்க முடியாது.
அரசாள மட்டுமல்ல, ஆரோக்கிய உணவிற்கும் கூட இஸ்லாமிய ஹிஜ்ரத் வழிகாட்டியாகவே அமைந்தது. மொத்தத் தில் ஹிஜ்ரத்தை ஆராய்ந்தால் அது ஒட்டு மொத்த வாழ்வின் வெற்றிப்படிக்கட்டுதானே!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, October 1, 2013

சாதனை!!! சாதனை!!



படிக்க மறக்க வேண்டாம் :

*
ஆர்.எஸ்.எஸ் காரர் வல்லபாய் பட்டேலை காங்கிரசுக்குள் அனுப்பி, சூழ்ச்சியால் நாட்டையே பிரித்தார்கள்.

*
காந்தியை கொன்று முஸ்லிம் மீது பழி போட்டார்கள்.

*
காமராஜரை உயிரோடு எரிக்க முயன்றார்கள்.

*
நாடு முழுவதும் கலவரங்களை நிகழ்த்தி சமூகத்தை கூறு போட்டார்கள்.

*
நரசிம்மராவ் என்ற ஆர்.எஸ்.எஸ் காரரை காங்கிரசுக்குள் ஊடுருவ விட்டு பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள்.

*
கோத்ராவில் ரயிலுக்கு தாங்களே தீ வைத்து விட்டு கலவரம் செய்தார்கள்.

*
அஜ்மீர், புனே, மாலேகான் என நாடுமுழுவதும் குண்டு வைத்துவிட்டு இந்தியன் முஜாகிதீன் என்றார்கள்.

*
தென்காசியில் தங்கள் ஆபீசில் தாங்களே குண்டுவைத்து மாட்டிக் கொண்டார்கள்.

*
திண்டுக்கல்லில் தங்கள் வீட்டில் தாங்களே குண்டுவீசி பிடிபட்டார்கள்.

*
ஆடிட்டர் ரமேசை கொன்றது யார் என்றே விசாரணையில் தெரியாத போதும் முஸ்லிம்தான் கொன்றான் என்றார்கள்.

*
சீனாவில் உள்ள ஹைடெக் தெருவைக் காட்டி இது மோடியின் அகமதாபாத் என்றார்கள்.

*
அமிதாப் மோடிக்கு ஆதரவாக பேசினார் என்று கிளப்பி விட்டு பின்னர் அமிதாப் மறுத்தவுடன் திருதிருவென முழித்தார்கள்.

*
அமேரிக்காகாரன் சிலரை அழைத்து மோடியை சந்திக்க வைத்து இதோ விசா தந்துவிட்டார்கள் என்று பரப்பினார்கள்.

*
இங்கிலாந்திலிருந்து அழைப்பு வந்தது என்று கதை விட்டார்கள். இரண்டையுமே அந்த நாடுகள் மறுத்ததும் ஓடி ஒளிந்தார்கள்.

*
கரன் தாப்பரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்களின் இரும்பு மனிதர் மோடி துருபிடத்த பழைய இரும்புச் சாமான் போல திருட்டு முழி முழித்ததை மறந்து விட்டு கரன் தாப்பர் மீதே குற்றம் சுமத்தினார்கள்.

*
வன்சார கடிதத்திற்கு இன்னும் முழிக்கும் இந்த கூட்டம் ஊரே கைகூப்பி சிரிக்கிறார்கள்

*
எப்பப்பா மோசடியின் மொத்த உருவமே இந்துத்துவ மதவெறிக் கூட்டம் தான்...


நன்றி :Yousuf Riaz

ஹஜ் ஒரு இனிய குடும்பத்தின் நினைவு



வாழ்கிறோம் ஒரு மாதிரியாக! காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நெறியற்ற முறையில். அம்மா அழைக்கிறார், “மகனே! எனக்கொரு உதவி. செய்வாயா?” அப்பீலே இல்லாமல் மறுக்கிறோம், “உனக்கு வேறு வேலை இல்லை?” மனைவியைக் கேட்கிறோம், “ஏம்மா! மகனை எங்கே?” மனைவி மறுவினாடி சொல்கிறார், “அவன் எங்கே போகிறான். என்ன செய்கிறான். யாருக்குத் தெரியும்?”
மகனை ஏவுகிறோம், “மாலைக்குள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரிகளை கட்டிவிட்டு வந்து விடுமகன் உடன் மறுக்கிறான், “நீ போகிற வழியில் தானே இருக்கு. கட்டிட்டா என்ன?” அம்மா மகளைக் கேட்கிறாள், ”எம்மா! சோத்துப் பானையிலே வெந்துருச்சான்னு ஒரு பார்வை பாருமகள் நாவல் படிக்கும் சுவாரசியம் கெட்டுப்போன் அதிருப்தியில், “ஏம்மா! நான் சும்மா இருக்கிறது மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியுமா?”.
என்ன ஒரு வாழ்க்கை! யாருக்கும் யாரும் கட்டுப்படாத, யாரும் யார் சொல்லையும் மதிக்காத குடும்பம், சமூகம், உறவுகள் என என்ன மாதிரியான வாழ்க்கை?
இந்த வாழ்வில் இருந்து கொண்டே ஹஜ்ஜுப்பயணம் மேற்கொள்ளும் நாம், கஃபாவைப்பார்க்கிறொம், “ஆஹா! இது தன்னை சரியாக வளர்த்த ஒரு தவறான வளர்ப்புத்தந்தைக்காக அல்லாஹ் தடுக்கும் வரை பாவ மன்னிப்புக்கேட்ட மகன் இப்ராஹீம் (அலை) நின்ற இடம் இல்லையா? தந்தைக்குப்பணிந்த மகனும், மகனை நல்லவனாகச் செதுக்கி வளர்த்த தந்தையும், கொத்தனாக, கையாளாக  நின்று கட்டிய ஆலயமல்லவா?” நினைவு வருகிறதா?
வானுயர்ந்த கட்டிடங்களையும் மீறி, வானம் பார்த்த கட்டாந்தரைகளும் கண்ணுக்குத் தென்படுகிறதா? ”இங்குதான் ஒரு அம்மா எங்கேயோ இருக்கும் தன் கணவனின் கனவுகளையும், வமிசப்பாரம்பரியத்தையும் உள்வாங்கி, அவர் தந்த குலக்கொழுந்தாம் மகனை அவர் குணத்துடனே பார்த்து பார்த்து வளர்த்த அன்னை ஹாஜராவும், மகன் இஸ்மாயீலும் கொதிக்கக் கொதிக்க வளர்ந்த பூமியல்லவா?”  நினைவுக்கு வருகிறதா?   
அரஃபாவில் நிற்கிறீர்கள். இது உன்னை அல்லாஹ்வுக்காக பலியிடப்போகிறேன்என ஒரு தந்தை சொன்னதும், “என்னையா? யாரைக்கேட்டீர்கள்? உங்களுக்கு இரக்கம் இல்லையா? நான் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லையா? என்ன வகையான தகப்பன் நீங்கள்?” என்று கேட்க அல்ல, முணுமுணுக்கக் கூட செய்யாமல், “அல்லாஹ் சொன்னால் செய்ய வேண்டியதுதானே தவிரஎன்னைக்கேட்க என்ன இருக்கிறது?” என்று போட்டி போட்டு இறையச்சத்தில் மிகைத்து நின்ற தந்தை இப்ராஹீமும், தனையன் இஸ்மாயீலும் பொறுமை காத்த பலிபீடமல்லவா இது?” நினைவு வருகிறதா?
ஜம்ராவைப் பார்க்கிறீர்கள். மகனை பலியிட தந்தை அழைத்துச் சென்ற போது, பாசத்தைக்காட்டி அம்மாவையும், பரிதவிப்பைக்காட்டி தகப்பனையும், பாரின் வனப்புகளை பார்க்காமல் பரிதாபமாக செத்துப் போகப் போகிறாயா? என்று மகனையும் சீண்டிப்பார்த்த ஷைத்தானை அம்மா, மகன், தந்தை என மூவரும் கல்லால் விரட்டி விரட்டி அடித்தது நினைவுக்கு வருகிறதா?
வரும். வர வேண்டும்.
போய் விட்டு வந்த பிறகாவது உங்கள் குடும்பம் அந்த அன்னை போன்ற, அந்தத் தந்தை போன்ற, அந்த மகன் போன்ற குடும்பமாக இறையச்சத்தில், ஒருவருக்கொருவர் விரும்பும் விதத்தில் மாற வேண்டும். இல்லையேல் ஒரு கெந்திங் போவது போல ஒரு மலாக்கா போவது போல உங்கள் ஹஜ்ஜும் ஒரு சுற்றுலாதான்.
சந்தேகமில்லை.
ஈதுல் அள்ஹா முபாரக்!

இறை விருந்தினர்களே!



ஹஜ்ஜுப் பயணம் செல்லும்
ஹக்கனின் தூதர்களே!
ஹாஜியாகித் திரும்பப் போகும்
ஹக்கான எண்ணங்களே!
விமானப் பயணத்திலிருந்து
விரைந்து காணப்போகும்
விந்தையாம் கஃபா வரை
விதவிதமாய் விரியும் கனவுகள்,
வெள்ளுடை தரித்த முதல்
வேந்தன் ஆலயம் தரிசிக்கும் வரை
வேகாத ஆவல்கள்
வேண்டாத ஆசைகள்!
உள்ளம் குளிர்ந்து
உவகை சுமந்து
உலகமே கிடைத்தாற்போல்
உல்லாசம் சுமக்கும் நாளது!
கஃபாவில் பத்தியமாய்
கால் முதல் அரை மாதம்,
மினாவில் கால் பதித்து
மின்னலென ஐவேளை
அரஃபா கண்டு ஒரு
அரை நாளின் சஙகமம்
முஸ்தலிஃபா மீண்டு ஒரு
முழு இரவு தரிசனம்
சாத்தானை கல்லாலடித்து
சாக்கடைகள் மனம் நீக்கி
மிச்ச மீதி கடமைகளை
மிதமாக நிறைவேற்றி
அண்ணலெம் பெருமானின்
ஆத்மார்த்த தரிசனத்தை
ஆழ்மனத்தில் உள்வாங்கி
அழுதழுது நினைந்துருகி
ஆகாயம் உமைப்போற்ற
அகிலமே புகழ் தூவ
அல்லாஹ்வின் அருள் பெற்று
அன்னையகம் மீளப்போகும்
அன்பு மிக்கீர்!
வாரிடுவீர் நன்மைகளை
வாழ்ந்திடுவீர் வளங்களுடன்
வாழ்த்துகிறேன் வாயாற!
வாழ்க! வாழ்க! இறை விருந்தினர்களே!

Friday, February 15, 2013

காலத்தை வென்ற காருண்ய நபி (ஸல்)

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். தான் பிறந்த நாளிலிருந்து உலகம் இறக்கும் நாள் வரை தன்னைப் பற்றி தரணி பேசிக்கொண்டே இருக்கும்படியான தகுதி மிக்க வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே. அவர்களை நேசிப்பவர்கள் அவர்களின் புகழுரைகளை, அவர்களின் புகழால் புழுக்கமுற்றவர்கள் தூற்றல்களை இன்றளவும் இறைத்துக் கொண்டிருக்கும் இறவாப் பெருமைக்குரியவர்கள் பெருமான் நபி (ஸல்) அவர்கள்.
வாளெடுத்து வெட்ட வந்த வாலிபர் உமர் (ரழி) அவர்கள்தன் வாழ்க்கையையே வள்ளல் நபிகளாரின் வளமார் கரங்களில் ஒப்படைத்தார். உம்மை விட வெறுப்பான முகம் எனக்கு வேறில்லை என்று வேவு பார்க்க வந்த துமாமா, உம்மைப்போல் பிரியமிக்க முகம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று இறுமாந்து போனார்.
அவர் எங்களுக்குப் பிடிக்காதவர்தான். ஆனால் பொய் மட்டும் அவர் சொன்னதில்லை என்று ஹெர்குலிஸ் மன்னர் முன் ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர் அண்ணலாரின் எதிரி அபூஸுஃப்யானாக இருந்து தோழராக பின்னாளில் மாறியவர். 
தஞ்சம் தேடி வந்த தோழர்களை தடுத்து மீண்டும் தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று தர்ம அடி கொடுக்க முனைந்த எதிரிகள் வைத்த குற்றச்சாட்டையே அவர்களுக்கு எதிராகத் திருப்பி, “நீங்கள் சொன்னவைகள் குற்றச்சாட்டுகளல்ல. ஒரு குணக்குன்றின் அடையாளங்கள்என அறைந்தாற்போல் சொல்லி அலற வைத்தவர் அபிஸ்ஸீனிய மன்னர் நஜ்ஜாஷி.
பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லேஇது பன்ச் டயலாக் அல்ல. பார் போற்றிய பயகம்பரின் மதீன அரசாட்சி கண்டு அலறி அடித்து, “எங்கே தன் காலடிக்கே வேட்டு வந்து விடுமோஎன பயந்து பயந்து செத்த பாரசீக ரோம ஆட்சியாளர்களையும்,  அது போன்றே அவர்களின் தேவையற்ற சீண்டல்களால் தடங்கள் அழிந்து போனவர்களாகவும் அவர்களை உலகம் கண்டது,  
அன்று தொடங்கி இன்று வரை பல அழுக்காறுகள் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டாலும், என்றும் நீங்காத சுய புகழ் வலிமைக்கு சொந்தக்காரராக நிமிர்ந்து நிற்கும் பெருமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.
இன்றைய முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை என்பதாலேயே நபிகளார் (ஸல்) அவர்கள் மீது சினிமா, இணையம் உள்ளிட்ட மீடியாக்கள் தொடர்ந்து தங்கள் இயலாமை களால் எச்சில்  துப்பினாலும், முஸ்லிம்களின்  துணையின்றியே அவைகளின் வேரறுக்கும் வலிமை அண்ணலாரின் வாழ்க்கை என்னும் சத்தியத்திற்கு உண்டு. அன்றும். இன்றும். என்றும்.
மீலாது வாழ்த்துக்கள்.