Thursday, September 13, 2012

இப்படியா அசிங்கப்படுத்துவது?

ஆலிம்களுக்கு நம் சமுதாயம் கொடுக்கும் அன்பளிப்புகளுக்குப் பெயர் கை மடக்கு. கையில் மடக்கி யாருக்கும் தெரியாமல் தரப்படும் அன்பளிப்பில் ஒரு ரூபாயும் இருக்கலாம். ஓராயிரம் ரூபாயும் இருக்கலாம் . பின்னாளில் அது கவர்களுக்கு இட மாற்றம் ஆன போதும் இந்த ரகசியம் காக்கப்பட்டது.
ஆனால் ஆலிம்களுக்கு தன்மானம் போய் விட்டதா? அல்லது கொடுப்பவர்கள் ஆலிம்களை யாசகர்களாக   எண்ணுகிறார்களா? விளங்கவில்லை. ரமளானுக்கு ரெண்டு மாதங்களுக்கு முன் கும்பகோணம் பிரபல ஆலிம் மர்ஹூம் அவர்களின் பிள்ளைகளால் வழங்கப்படும் ரமளான் அன்பளிப்புக்காக அவர்களின் ஏஜண்ட்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் டேரா அடித்து அந்தப் பகுதிக்கு ஆலிம்களை மொத்தமாக வரவழைத்து, அவர்களின் பதிவுகள் புதுப்பிக்கப் படுகிறது.
ஆயிரத்தெட்டு கேள்விகளின் பின் சொந்தப் பள்ளிவாசல்களின் இரண்டு வக்துகளை மவ்த்தாக்கிய பின் அவர்கள் விடுவிக்கப்பட்டு, ரமளான் வந்து விட்டால், ஒரு நாள் குறித்து அன்றும் இதே போன்று அந்த ஏஜண்ட்கள் முன் ஆஜராகி, தன் பெயரை சொல்லி தனக்கு வந்துள்ள பணத்தை, துணியை வாங்கிச்செல்லும் அவலம் நடக்கிறது.
இன்னொருவர் புதுக்கோட்டை பணக்காரர். அவர் இப்படியெல்லாம் மெனக்கெடுவதில்லை. "புதுக்கோட்டைக்கு வா! தர்றேன்!. இல்லையா! போ" இருக்கிற இடத்திலிருந்தே படியளக்கிறார் அந்த பகவான். இரண்டுக்கும் போட்டி போட்டு முண்டியடிக்கும் மரியாதைக்குறிய, மதிப்பிற்க்குரிய, மவ்லானாக்களை, கிப்லாக்களை நினைக்கும்போது, அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் கோடவுன்களில் யாசகர்களை அடைத்துப் போட்டு இருபத்தேழாம் நாள் யாசகம் தரும் பணக்காரர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
ஆலிம்களே! அன்பளிப்புகள் தருகிறவர்கள் உங்களைத் தேடி வரட்டும். பணக்காரர்களே! ஆலிம்கள் மறந்த கண்ணியத்தை அன்பளிப்புகளை அவர்களைத் தேடிக் கொடுப்பதன் மூலம் நீங்களாவது காப்பாற்றுங்கள். இன்னொரு உண்மை. உங்கள் அன்பளிப்பு  ஸக்காத் பணத்திலிருந்து என்றால், பணியிலிருக்கும் எந்த ஆலிமும் அதைப் பெற அருகதை இல்லை.  பணியில் இல்லாதவரும்  தன் கண்ணியம் கருதி வாங்க மாட்டார்.
சிந்தியுங்கள்.

காசுக்கேற்ற இஸ்லாம் பேசுவது எப்படி?

 
காசுக்கேற்ற இஸ்லாம் பேசுவது எப்படி?

"தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சிறப்புப் பேட்டி என்ற தலைப்பிட்டு தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி நம் பார்வைக்குப் பட்டது. அதில் த.த.ஜ தலைவருடைய பேட்டி இஸ்லாத்தைக் கச்சைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது..
 
கேள்வி: முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது - இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து க
ள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்திய புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.

இவர் அளித்த பதிலில் மேலே அடிக்க
டிடப்பட்ட வாசங்களை நன்கு கவனிக்கவும். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம் என்கிறார்.

அதாவது பலதார மணம், அதிகமாகக் குழந்தை பெறுவது இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றதாம்! அதற்குக் காரணம் படிக்கவேண்டும் தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவது. இவரது கருத்தை இவ்வாறு விளக்கலாம். அதாவது பலதார மணமும் அதிகமாகக் குழந்தை பெறுவதும் தரமற்ற வாழ்க்கையையும் படிப்பறிவில்லாத சமூகத்தையும் உருவாக்குகின்றது.

என்ன ஒரு சிந்தனை? அப்படியாயின் இதைத்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்குக் கற்றுத் தந்தார்களா? இவருடைய இந்த சிந்தனையை சற்று குர்ஆன் ஹதீசுடன் ஒப்பிட்டுப் பார்ப்பம்.

பலதார மணத்தைப் பற்றிக் கூறும் திருமறை வசனம்.
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துக
ண்டு அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கமாட்டம் என நீங்கள் அஞ்சினால் மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவ, மும்மூன்றாகவ, நான்கு நான்காகவ நீங்கள் திருமணம் செய்து கள்ளலாம். நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகள்ள வேண்டும்) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (பதுமாக்கிக்) கள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். (அல்குர்ஆன் 4:3 )
 
முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து கள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இதிலிருந்து என்ன ச
ல்ல வருகின்றார்? நீங்கள் கூறுவது பன்று அது ஒரு தவறான செயல்தான். எனினும் குர்ஆனில் அது வெறும் வார்த்தையாகத் தான் உள்ளது. அதனை செயல்படுத்தும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. நாங்கள் அல்ல ஹிந்துக்கள்தான் அதனை செயல்படுத்துகின்றனர்.

குர்ஆனில் ஒன்று அனுமதிக்கப்பட்டது எனில் அதனைச் செயல்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? இவர் கூறுவது ப
ன்று அனுமதிக்கப்பட்ட ஒவ்வரு விஷயங்களையும் இறைமறுப்பாளர்களைத் திருப்திப்படுத்த மாற்றிக் கூறலாமே! இனி சைவத்தை விரும்பும் பார்ப்பனர்கள் அசைவ உணவை உண்பதால் மிருகங்கள் வதைக்கப்படுகின்றன என்று விமர்சித்தால் இவர் இவ்வாறு கூறுவார் பலும்! அசைவ உணவை உண்ணலாம் என்று உள்ளதே தவிர அசைவம் சாப்பிடும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. ஹிந்துக்கள் தான் அதிகமாக அசைவம் சாப்பிடுகின்றனர். இவ்வாறே ஒவ்வரு விஷயங்களையும் கூறலாம்.

இவர் அளித்த பதிலின் இரண்டாம் பாகம்.
 
எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.

அதிகமாகக் குழந்தை பெற்றுக் க
ள்ளுவது தீமையா?
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் க
ள்வதால் மக்கள்தகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறதாம். பி.ஜைனுல் ஆபிதீன் பன்ற இஸ்லாமிய நாத்திகர்கள் வேண்டுமானால் இந்தக் கேள்வியைக் கண்டு நடு நடுங்கி கேட்டவர்களைச் சமாளிக்க இஸ்லாம் எக்கேடு கெட்டால் என்ன என்று ப(தி)ல் இளித்திருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிமைப் பறுத்த வரையில் இந்தக் கேள்வியே அடிப்படையற்றதாகும்.

எந்த ஒரு சமுதாயமும் பெரும்பான்மையாவதும் சிறுபான்மையாவதும் அல்லாஹ்வின் நாட்டத்தின் பாற்பட்டது. இதில் மனிதனின் எந்த முயற்சியும் பலன் தராது. எட்டு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டனர். இப்ப
தும் இந்துக்களே இங்கு பெரும்பான்மையினர். இந்தனேசியா பன்ற நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.

மக்கள் தகைப் பெருக்கம் ஆபத்து என்று கூப்பாடு படுபவர்களின் தாய் தந்தையர் அவர்கள் பிறப்பதற்கு முன் குடும்பக்கட்டுப்பாடு செய்திருந்தால் இவ்வாறு கூப்பாடு படுபவர்கள் எங்கே இருந்திருப்பர்? மின் விளக்கு, தலைபேசி, கணினி இவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெற்றர்கள் பிள்ளைபெற்றுக் கள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தால் அவர்கள் பிறந்திருப்பார்களா? ஆக இரண்டுக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் முட்டாள்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவாக்கறைகள் என்ற மறைவான ஞானம் இவர்களுக்கு இருந்தால் இவர்கள் கட்டுப்படுத்தட்டும் தவறில்லை.

ஆனால் அவ்வாறு பிறக்கும் எத்தனை குழந்தைகள் மிகச் சிறந்த அறிவு ஜீவிகளாக சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள்? எலிக்குப் பயந்து வீட்டையே களுத்தினானாம் முட்டாள் ஒருவன். இனி இந்த மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது இறைவன் வகுத்த ஒரு ஏற்பாடு என்பதை ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கவனத்துக்குக் கண்டு வர விரும்புகின்றேன்.

வானம் பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு பெண் சந்ததியை மட்டும் க
டுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்தததியை மட்டும் கடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கடுக்கின்றான். அன்றி அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும் ஆற்றலுடையவனகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 42: 49,50)

ஒரு சம்பவம்:
தன் ஒரு குழந்தை இறந்து விட்ட ச
கத்தை மிகவும் பறுமையுடன் எதிர்கண்ட அன்னை உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு அப்துல்லாஹ் என்ற ஆண்குழந்தை பிறக்கின்றது. அந்த ஆண்குழந்தை நபி (ஸல்) அவர்களிடம் கண்டு வரப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் பேரித்தம் பழத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை குழந்தைக்குக் கடுத்து அதற்காக துஆவும் செய்கின்றார்கள். இந்த அப்துல்லாஹ்வுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த ஒன்பது பேரும் திருக்குர்ஆனை மனனம் செய்த சிறந்த மார்க்க அறிஞர்களாக விளங்கினர் என்று வரலாறு கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையின் விளைவாக உம்மு சுலைம் அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வெகுமதி! ஜைனுல்ஆபிதீனின் விழிப்புணர்வுப்படி அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் மகத்தான ஒன்பது மார்க்க அறிஞர்களை இந்த சமூகம் இழந்திருக்கும்!

அல்லாஹ்வை வணங்கி வாழக்கூடிய தனது உம்மத் இந்த பூமியில் அதிகமாக இருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். உங்களை நேசிக்கக் கூடிய அதிகமாகப் பிள்ளை பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் முடியுங்கள் என்ற நபிம
ழிக்கு முன் மக்கள் தகைக் குறைப்புக் கூப்பாடு படும் ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கூற்று எம்மாத்திரம்?

நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில் கூட இவ்வாறு கூறினார்கள்: அறிந்து க
ள்ளுங்கள்: மறுமைநாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்பது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மஉஸ் ஸவாயிது 271-3 ) (இறுதிப் பேருரை - தாருல் ஹீதா வெளியீடு)

ஆனால் குர்ஆன் கூறுகின்றது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற கூற்றெல்லாம் திருவாளர் ஜைனுல் ஆபிதீனிடம் எடுபடாது. அது அந்த காலத்திற்குப் ப
ருந்தும் இந்த காலத்துக்குப் பருந்தாது. இந்த காலத்தில் இதனை நாம் இவ்வாறுதான் விளங்கிக் கள்ளவேண்டும் என்று கூறுவார். இதனை நாம் இட்டுக்கட்டிக் கூறவில்லை. இவரிடமே இதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன.

அல்லாஹ் ஒவ்வரு இரவும் முதல்வானத்துக்கு இறங்குகின்றான் என்ற நபிமழியை தனது சுய அறிவைப் பயன்படுத்தி விளக்கினார். நபித்தழர்கள் புரிந்து கண்டது தவறு என்று வாதிட்டார். அப்படியாயின் அது குறித்து நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு விளங்கியிருந்தனர்? என்ற கேள்விக்கு இவரிடம் பதில் இல்லை. ஜைனுல் ஆபிதீனைக் கண்மூடிப் பின்பற்றிக் கண்டிருக்கும் சகதரர்களே! விழித்தெழுங்கள். இவரது கூற்றுக்களை திருக்குர்ஆனுடனும் நபிமழியுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


அன்புடன்
தேங்கை முனீப்

(இது ஒரு இரவல்பதிப்பு- நன்றி தேங்கை முனீப்)

“வைரத்தைப் பழிக்கும் கூழாங்கற்கள்”

"ஜனாதிபதி அவர்களே...! நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா?" - இது செய்தியாளர்களின் கேள்வி.
"ஆமாம்...! எப்பதையும் விட நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள்தான் இப்பது பலம் வாய்ந்தவர்கள்." - இப்படி பதில் சன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன்.


இதற்கு முதல் நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. நாகசாகி, ஹிரஷிமா எனும் இரு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தம் என்று அறியாமலேயே இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கண்டிருக்கும்பதே கல்லப்பட்டார்கள்.
எல்லா வகையான பர் தர்மங்களையும், சர்வதேச சட்டங்களையும், மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்கு தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கூரம் இது...!


அன்று வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சுக்களால் இன்றைக்கும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நுரையீரல் களாறுகள், புற்றுநய், பிறவியிலேயே ஊனம் பன்ற பல நய்கள் வாட்டி வருகின்றன.
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் க
ன்றழித்த பிறகுதான் ஜனாதிபதி நிம்மதியாக உறங்கினாராம்...!

அது ஒரு ப
ர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் துடித்துப் பய் விட்டார்கள்.
அந்த இடத்துக்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்கள். "இவள் பர் செய்யவில்லையே! பிறகு ஏன் இவள் கலைக்கு ஆளானாள்? "இவ்வாறு கேட்டு, பர் சமயத்திலும் கூட அப்பாவி மக்கள் கல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணடு மண்ணாகி விடும் கடூரப்ர்க்களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான பர் ஒழுங்கு முறைகளை
வகுத்துத் தந்து விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் கூறினார்கள்:
* பரில் பங்கு கள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியரைக் கள்ளாதீர்கள்.
* மடங்களில் உள்ள துறவிகளையும், வணக்கத்தலங்களில் இருக்கும் மக்களையும் கல்லாதீர்கள்.
* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
* விளை நிலங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.

இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள்!
இவை எல்லாவற்றையும் விட திருக்குர் ஆனில் ஓர் அருமையான வசனம் உண்டு. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்து கள்ளலாம்.
" நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கலை செய்து விட்டால் அவன் மனிதர்கள் அனைவரையும் கலை செய்தவன் பலாவான். எவன் ஒருவன் பிறிதருவனுக்கு வாழ்வு அளிக்கின்றான அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன்லாவான்!"
(திருக்குர் ஆன் - 5:32)
அநியாயமாக மனித இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் பர் மேகங்கள் சூழுமேயானால் அப்பதும் கூட அப்பாவி மக்கள் கல்லப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.

ஜிஹாத்-புனிதப்பர் என்றெல்லாம் கூறிக்ண்டிருப்பவர்களும் சரி, பன்னாட்டுத் தலைவர்களும் சரி - இஸ்லாம் கூறும் இந்த மானுட தர்மத்தைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!

Wednesday, September 12, 2012

பித்அத்துகளைச் சாடும் பித்அத்துகள்

அல்லாஹ் குர் ஆனில் வமா ஆதாகுமுர்ரஸூலு ப குதூஹு வமா நஹாக்கும் அன்ஹு  பன்த்தஹூ (அல்லாஹ்வின் தூதர் எதை கொண்டு வந்தார்களோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். எதை எல்லாம் தடுத்தார்களோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்) என்கிறான். இது குர் ஆனுக்கு நீ விளங்குகிற அர்த்தம் வேறு. நபிக்கு நாம் விளக்குகிற அர்த்தம் வேறு  என்பது பொருள்.
ந்பிக்கு அடுத்து தெளிவாக குர் ஆனை விளங்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஸஹாபாக்கள். அதனால்தான் அலைக்கும் பி சுன்னதீ. வ சுன்னத குலஃபாஅர் ராஷிதீனல் மஹ்திய்யீன் (உங்களுக்கு என்னுடைய வழிமுறையுடன் எனக்கு பின்னால் உங்களை வழி நடத்தும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் (அபு பக்ரின், உமரின், உஸ்மான், அலீயின் (ரழி-அன்ஹும்) வழிமுறையும் ஆதாரமாகும்) என்றார்கள்.
எனவேதான் ரஸூல் (ஸல்) அவர்களுக்குப் பின் குர் ஆனை தொகுக்கும் விஷயத்திலும், குடிகாரனுக்கான தண்டனையை வரையறுக்கும் விஷயத்திலும், தராவீஹ் இருபது ரக் அத்துகளை ஒரே இமாமின் கீழ் நடத்தும் விஷயத்திலும், ஜும்ஆவுக்கான முதல் பாங்கை எற்படுத்திய விஷயத்திலும்,
ரஸூல் (ஸல்) வர்ணித்த பொற்காலத்தில் வாழ்ந்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) எற்படுத்திய ஹதீஸ்களைத் தொகுக்க கட்டாயம் ஏற்படுத்தியதிலும் இந்த சமுதாயத்தின் அறிவும் வளர்ச்சியும் வணக்க வழிபாடும் மேன்மையடைந்தது. முஸ்லிம்கள் அந்தப் பெருமக்களை இன்றும் நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறது.
ஆனால் அழிவுக் காலத்தின் அடையாளமாய் 1400 ஆண்டுக் காலத்திற்குப் பின் தமிழ் முஸ்லிம்களுக்குப் பிடித்த கெரகமாக முளைத்த அற்பர்கள் சிலர் பித் அத்துகளை அழிக்கிற போர்வையில் ஸஹாபாக்களையே இழிவு படுத்தி இப்போது ரஸூல் (ஸல்) அவர்களையே இஸ்லாத்தின் முழுமையான வழிகாட்டியில்லை என்று வக்கிரம் கக்க ஆரம்பித்திருக்கிறது. 
இந்த பைத்தியக்காரர்கள் குர் ஆனையோ, ஹதீஸையோ பின்பற்றக் கூடியவர்களல்ல், மனோ இச்சைகளை பின்பற்றக் கூடியவர்கள் என்பதை இவர்கள் உருவாக்கிய பித் அத்துகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
1. அரசியல் ஹராம் என்பது 1980 களின் நிலை. பழனிபாபா வஃபாத்தான போது இவர்கள் சில சட்டங்களிருந்து வாபஸ் ஆனபோது, உயிர் பிழைக்க இருந்த ஒரே வழி அரசியலை பிழைப்பாகக் கொள்வதுதான் என்று இருந்ததால்தன்னோடு இருந்த இளைஞர்களை  தக்க வைக்க அரசியல் ஆகும் என்ற பித் அத்தை ஆரம்பித்தார்கள். 
2. பித் அத்தில் ஒரு படி ஏறியாயிற்று. இனி சரம் சரமாக பித் அத்துகளின் உருவமாகவே மாறிப் போனார்கள். அவுலியாக்களின் கொடிகளை கிண்டல் செய்த இவர்களை அல்லாஹ் கொடியேற்ற, கொடியேந்த வைத்தான். இன்று வரை அந்த கருப்பு வெள்ளை கொடிக்கு மழுப்பலில்லாத ஆதாரம் காட்டவில்லை. 
3. பச்சைக் கொடியை, பச்சைப்போர்வையை கிண்டல் பண்ணாத மேடையில்லை என்ற நிலை மாறி, பிச்சைக்காரகள் வசூல் பண்ணிய காசுசுகு சண்டை போடுவது போல் நாறிப்போய் தூய அரசியல் இரண்டாக பின்னமானபோது அவுலியாக்களின் பச்சைக்கொடியை பிச்சையேடுத்து கருப்பு வெள்ளையுடன் சேர்த்து பாவப் பரிகாரம் செய்து கொண்ட பித் அத் அரங்கேறியது.
4. அரசியல் என்றாலே அயோக்கியத்தனம் வந்து விடும்தானே? அன்று வரை பள்ளிவாசல்களுக்கும், உளறுவாயன்களின் பிரச்சாரத்துக்கும் கிறிஸ்தவர்களைப் போல் பெண்களை வெளியே இழுத்து வந்தவர்கள், போராட்டங்களுக்கும் இழுத்து வந்த பித் அத்தை ஆரம்பித்தார்கள்.
5. நடுத்தெரு தொழுகைப் போராட்டம் என தொழுகையையே அசிங்கப் படுத்திய பித் அத்துக்கு தனிப்பெரும் சொந்தக்காரர்கள் இவர்கள்தான். 
7. இறந்தவனுக்கு வருஷ ஃபாத்திஹா ஓதுவது ஷிர்க் என்று சொன்ன இவர்கள் டிசம்பர் 6 ல் வருஷம் மறக்காமல் பாத்திஹா ஓதித் தொலைக்கிறார்கள். (இதுலே வேடிக்கை என்னன்னா, இவர்கள் அரசியல் ஹராம் ஃபத்வாவில் இருந்த போது நடந்தது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, அரசியலில் நுழைந்தது 1996 ல். இடித்த பிறகு நாலு வருஷம் மய்யித்தாக இருந்து விட்டு 96 ல் இருந்து இன்று வரை வருஷ கத்தம் மறக்காமல் ஒதுகிறார்கள். (இறந்தவனை நினைத்துப் பார்த்து ஒதுவது கத்தம் என்றால், இதுக்குப் பேரு என்ன? அவனாவது உயிருள்ள மனிதன். இதுக்கு உயிர் கூட இல்லையே?)
8. அவுலியாக்களை, நாதாக்களை ஷஹீத் என்று சொல்வது ஷிர்க். ஆனால், அரசியல் பிழைப்புக்காக திப்பு சுல்தான் கான் சாஹிப் இவர்களெல்லாம் ஷஹீதாகிப் போன பித் அத் இந்த பித்துகள் உருவாக்கியதுதான்.
இதெல்லாம் எனக்குத் தெரிந்த பித் அத்துகள். இன்னும் உங்களுக்கு தெரிந்ததையும் வரிசைப் படுத்துஙகள். இவர்கள் போகிற வரை போகட்டும் என விட்டு விடுங்கள். எதற்கும் ஒரு முடிவு உண்டு.
சிலரை சில காலமும், பலரை பல காலமும் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது.

குர் ஆனின் மரியாதையைக் கெடுத்த முஸ்லிம் நாத்திகர்கள்

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

அதென்ன முஸ்லிம் நாத்திகர்கள்?

முஸ்லிம் அல்லாத நாத்திகர்களுக்கு கடவுளே இல்லை. கடவுள் உண்டு என்பவர்களும், அந்தக் கடவுளுக்கு பல உருவங்கள் உண்டு என்பதும் ஆத்திகம்.

முஸ்லிம்களுக்கு கடவுள் உண்டு என்பதும். அவன் வரையறை அற்றவன் என்பதும், உருவமற்றவன் என்பதும் நம்பிக்கை.

ஆனால் முஸ்லிம் நாத்திகர்கள் வித்தியாசமானவர்கள். இவர்கள் முழுக்க முழுக்க தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் மட்டும் விஷமாகப் பரவியவர்கள். தங்களை தனி ஜாதியாகக் காட்டிக் கொள்வதிலே வினாடிக்கு வினாடி கவனமாக இருப்பவர்கள்உலகமே இருண்டு கிடக்கிறது. நாங்கள் மட்டும் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்பவர்கள்.

இவர்கள் வணங்கும் அல்லாஹ்வுக்கு கை உண்டு கால் உண்டு. கண் உண்டு. செவி உண்டு. மொத்தத்தில் உருவம் உண்டு. இல்லையானால் அவன் இல்லை என்பதை நிரூபிக்க பத்து வருஷமானாலும் தண்ணீர் குடிக்காமலே வாதம் செய்ய இவர்களுக்கென ஒரு குருமகா சன்னிதானம் உண்டு.

ஒரு தலைமுறைக் காலமாக தமிழ் சமுதாயத்தைப் பிடித்த இந்த நாத்திகர்களின் வெற்றி பெற்ற கொள்கைகளில் ஒன்று, “குர் ஆனும் குமுதமும் ஒன்று.” என்பது.
இதனால் முஸ்லிம் சமுதாயம் எவ்வளவு இழிவடைந்தது? என்பதே நான் இங்கு சொல்ல வந்தது.

அல்லாஹ் குர் ஆனின் அனைத்து சிறப்பு மற்றும் மரியாதைகளை விளக்கி,

இன்னஹு குர் ஆனுன் கரீம். ஃபீ கிதாபிம் மக்னூன். லா யமஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” - இது கண்ணியமிக்க குர் ஆன். இது பாதுகாக்கப் பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூள் பலகையில் இருக்கிறதுஇந்த குர் ஆனை பரிசுத்தமானவர்களைத் தவிர மற்றெவரும் தொட மாட்டார்கள்

ஒரு வேதம் முதலாவது தன் புனிதத்தை செவிட்டில் அறைகிறாற்போன்று பதிவு செய்தது குர் ஆன் மட்டும்தான். எனவேதான் இந்த வரையறையை ஒட்டியே 1400 ஆண்டுகளாக மலை சுமக்க முடியாத அளவு எண்ணப்பட்ட, பேசப்பட்ட, எழுதப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அத்தனை விளக்க உரைகளும், ”குர் ஆனைப் படிப்பதும், விளங்குவதும், குர் ஆனின் படி நடப்பதும் இரண்டாவது விஷயம்.

முதலில் அதை தொடுவதற்கே பரிசுத்தம் வேண்டும் என்று கூறி, சிறு தொடக்கு ஏற்பட்டவர்கள் ஒழு செய்யாமலும், பெருந்தொடக்கு ஏற்பட்டவர்கள் குளிக்காமலும் குர் ஆனைத் தொட ஷரீ அத் சட்டத்தில் தடையை ஃபிக்ஹ் சட்ட மேதைகள் தெளிவு படுத்தினர்.

ஆனால்,

முப்பது வருஷமாக இந்த முஸ்லிம் நாத்திகர்கள் தொடராக மீண்டும் மீண்டும் முதல் வரியில் நாம் சொன்ன ஆயத்துகளுக்கு சொன்ன விபரீத அர்த்தம் கிறிஸ்தவர்கள் யூதர்கள் திட்டம் போட்டு கெடுக்க முடியாத மரியாதையை கெட வைத்து, அல்லாஹ்வின் லஃனத்தை ஒட்டு மொத்தமாக சுமக்கச் செய்தது.

அப்படி என்னதான்  சொன்னார்கள்?

லவ்ஹுல் மஹ்ஃபூள் பலகையில் பாதுகாக்கப் பட்ட அந்தக் குர் ஆனை தூய்மையான மலக்குகள் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்பதுதான் அர்த்தம். காரணம் குர் ஆன் புத்தகமாக இறக்கப்படவில்லை என்பது சின்னப் பிள்ளைக்கும் தெரியும். அதுவும், நம் கையில் உள்ள குர் ஆன் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் சாதாரண வேலைக்காரன் கையில் புரண்டு அச்சடிக்கப்பட்டது. அவன் அச்சடிக்கும்போது ஒழுவோடு இருந்தானா? இருக்க வேண்டுமா? எனவே இந்தக் குர் ஆனை அல்லாஹ் சொல்லவே இல்லை. நம் கையில் உள்ள குர் ஆனை உழு இல்லாமலும் தொடலாம். மாதவிலக்கு உள்ள பெண்ணும் தொடலாம். குளிப்பு கடமையானவர்களும் தொடலாம்.

பாமர பாஷையில் கேணத்தனமான, கொஞ்சம் கோபத்தோடு சொன்னால் மொள்ளமாரித்தனமான இந்த விளக்கம் கேட்டு ஷைத்தான் முப்பது வருஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறான். நாம் கெடுக்க வேண்டிய கேடுதலை இந்த முஸ்லிம் நாத்திகர்கள் செய்தால் அவனுக்கு சந்தோஷம் வராதா?

குர் ஆனுக்கு விரிவுரை செய்ய எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், அணி இலக்கணம், பொருள் இலக்கணம், குர் ஆன் இறங்கிய வரலாறு, குர் ஆன் இறங்கிய காலத்தில் இருந்த மனிதர்களின் வரலாறு, முந்தைய வேதங்களின் வடிவத்துக்கும் குர் ஆனுக்கும் உள்ள வித்தியாசம், மாற்றப்பட்ட வசனம், மாற்றிய வசனம்..... இப்படி கணக்கிலடங்கா கலைகள் தெரிந்தவர்கள்தான் குர் ஆனுக்கு விரிவுரை செய்ய முடியும் என்பது மார்க்கக் கல்வியை முறையாகப் பயின்றவர்களுக்குத் தெரியும்.
படா ஜஹ்ல்கள் குர் ஆனுக்கு விரிவுரை எழுத வந்தால் என்ன நடக்கும்? அதுதான் நடந்திருக்கிறது.
முதலாவது, குர் ஆன் மலக்குகளுக்கான வேதம் அல்ல என்ற ஆரம்ப நிலை அரிச்சுவடி விளக்கமே முஸ்லிம் நாத்திகர்களின்பரிசுத்தமான மலக்குகளைத் தவிர எல்லா வகை அழுக்கான மனிதர்களும் தொடலாம்என்ற வாதத்தின் கழுத்தறுத்து விடுகிறது 
இரண்டாவது குர் ஆன் ஜிப்ரீல் மூலம் நபிகளாருக்கு வாய் மொழியாக இறங்கியது. என்வே எழுத்து சம்பந்தமான குர் ஆனுக்கு பரிசுத்தம் தேவையில்லை என்பது படா ஜஹ்ல்களின் கூற்று. இத்ற்கு கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
தவ்ராத் இஞ்சீல், ஜபூர் மூன்று வேதங்களும் புத்தகமாகவே இறங்கியது. காரணம் இறைவன் தன்னுடைய சட்டங்களை அந்த மனிதர்களுக்கு கட்டளையாகவே தந்ததால் அவர்கள் கேட்டு அல்லாஹ் வசனங்களை இறக்கவில்லை. ஆனால், குர் ஆன் முதலில்உங்களுக்கு நபியாக நான் அனுப்பிய இந்தத் தூதரை முதலில் படியுங்கள்.
அவர் 40 வருங்களாக உங்களுடனேயே வாழ்ந்தும், உங்களைப் போல் தப்பான செயல்கள் ஏதும் செய்தாரா? பொய், புறம், கோள் உபட விரும்பத்தகாத வார்த்தைகள் அவர் பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உங்களுக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கும் மனிதர் மனிதப் புனிதர் என்பதால் முதலில் அவரைப் படியுங்கள். நல்லதை எடுப்பதா? கெட்டதை விடுவதா? என்பதை அப்புறம் யோசிக்கலாம் என்பது போன்ற செய்திதான்இக்ரஃ மற்றுமுள்ள முதல் ஐந்து வசனங்கள் சொன்னது.
 அதிலும் எழுத்தின் அவசியமும், எழுதப்படுவதன் புனிதமும், எழுதப்பட்ட செய்திகளை மனிதனுக்கு அல்லாஹ் அறிவாக ஆக்கினான் என்ற சுட்டிக்காட்டலும், பின்னாளில் குர் ஆனை நானே எழுத்து வடிவமாக்குவேன் என்று முன்னுரை ஆக்கினான்.
சஹாபாக்கள் தெளிந்தார்கள். குடிக்கலாமா? அனாதைகள் விஷயத்தில் எப்படி நடப்பது? வாரிசு இல்லாத பெண்ணின் சொத்தை எப்படி பங்கிடுவது? ........ சரம் சரமான கேள்விகள். 23 வருடங்களில், மனிதர்கள் கேட்டுப்பெற்ற, திணிக்கப்படாத, அறிவுத் திறனற்றவர்களை அறிவின் உச்சமான கேள்வி கேட்க வைத்து பதில் சொல்லி, குர் ஆனாக கியாமத் நாள் வரை நிலைக்கச் செய்தான்.
அல்லாஹ்விற்கு வாய் மொழியின் மூலம் இறக்கி மனதில் பதிய வைப்பதுதான் குர் ஆனை இறக்கியதன் நோக்கம் என்றிருந்தால், குறைந்த பட்சம் முஸ்லிம்கள் அனைவரையும் ஹாஃபிஸ் ஆன திறன் பெற்றவர்களாக படைத்திருக்க வேண்டும்ஆனால் பிரபல்யமான சஹாபாக்களே ஹாஃபிஸ்களாக இல்லை என்பதில் இருந்து மனிதர்கள் கேட்டு இறைவன் இறக்கி வைத்து, மனன சக்தியுள்ளவர்களின் மனதில் பதிந்த குர் ஆன் முதற்படி என்றால், அது புத்தகமாக்கப்படவும் வேண்டும் என்பது அடுத்த படி.
ஏனெனில் அது லவ்ஹுல் மஹ்ஃபூள் புத்தகத்திலிருந்து ஒலி அலையாக இறக்கப்பட்டது. மீண்டும் அது உலகின் லவ்ஹுல் மஹ்ஃபூள் ஆக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் விதிதான்
இல்லையென்றால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கடைசிக் காலங்களில் நடந்த ஒன்றிரண்டு போர்களிலும், அபூபக்ர் சித்தீக் (ரழி) காலத்தைய போரிலும் ஹாஃபிஸ்களான சஹாபாக்களை கூட்டம் கூட்டமாக பலி கொடுக்க நேர்ந்ததும், அதன் பின், உமர்(ரழி) உள்ளத்தில், குர் ஆனை தொகுக்க வேண்டிய கட்டாயம் எச்சரிக்கை மணியாக அடித்ததும், அதை அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் சரிதான் என்று உள் வாங்கியதும், ஸைத் இப்னு ஃதாபித் குர் ஆன் தொகுப்பதன் களப் பணியாளராக இறங்கியதும் சாத்தியமே இல்லை.
ரஸூலுல்லாஹ்வைப் படைத்ததை, 40 வயது வரை பண்படுத்தியதை, அதை சொல்லிச் சொல்லி மாய்ந்தே நபிகளாரைப் பின்பற்றிய மனிதர்கள் சூழ்ந்திருக்க வைத்ததை, நபிப்பட்டம் தந்ததை, 13 வருடங்கள் முந்தைய வரலாறுகளையும்., அதனூடே தவ்ஹீத் கலிமாவை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி பண்படுத்தியதை, மதினாவின் பத்தாண்டுகளை அறிவுப் பல்கலைகழகங்களாக சஹாபாக்கள் உருவாகியதை லவ்ஹுல் மஹ்ஃபூளில் எழுதி வைத்த இறைவன், முஸ்லிம்கள் அனைவரையும் ஹாஃபிஸ் ஆக்காமல் அறிவுப் படித்த்ரத்தின் அடிப்படையில் மனிதர்களை உருவாக்கியதால், கியாமத் நாள் வரை குர் ஆன் பாதுகாக்கப்பட புத்தக வடிவத்தையும் லவ்ஹுல் மஹ்ஃபூள் போலவே பாதுகாக்க வழியமைத்தான்.
 இப்படி வரும். வர வேண்டும் என்று விரும்பியுள்ளான். இல்லையெனில், “அல்லஹ்வின் ரஸூல் செய்யாததை நீங்கள் எப்படிச் செய்யலாம்? என்று கேட்கப்பட்ட நேரங்களிலே உடனே ஏற்றுக் கொண்ட அபூபக்ர், உமர் (ரழி_ஹுமா) இருவரும் குர் ஆன் புத்தகமாக்கப்பட்ட விஷயத்தில் பிடிவாதமாக நின்றதன் அர்த்தம் என்ன?
இது, உமருடைய அறிவு  பிச்சை போட்டதால், யஹூதிகளுக்கு நஸ்ரானிகளுக்கு பிடித்த விரிவுரையில் புதுக் குர் ஆனை எழுதி அற்பக் காசுகளுக்கு விற்று வயிறு வளர்க்கும் படா ஜாஹில்களுக்குத் தெரியாதா?
குர் ஆனை யார் வெண்டுமானாலும் தொடலாம் என்றிருந்தால்தான் இஸ்லாமியர் அல்லாதவருக்கு குர் ஆனைத் தர முடியும். அவர்களும் நேர்வழி பெற முடியும் என்றெல்லாம் லாஜிக் பேசி, குர் ஆனை பிட்டு நோட்டீசை விடக் கேவலமாக விநியோகிக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களும் இதே போன்று மரியாதையை கேடுக்க வேண்டும் என்று, “கீழேயிருந்து ஒரு பேப்பரை அது குர் ஆன் பேப்பர்னு எடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள். அது அரபியிலுள்ள சினிமா பத்திரிகையா இருந்தா? நியூஸ் பேப்பரா இருந்தா? என்றெல்லாம் எகத்தாளம் பேசி, முஸ்லிம்கள் மத்தியிலும் குர் ஆனின் மரியாதையை எவ்வளவு கெடுக்க முடியுமோ, கெடுத்தார்கள்.
ஒரு முக்கிய விஷயம்:குர் ஆன் அச்சடிப்பத்ற்காக விஷேச ஏற்பாடுகளுடன் கூடிய பிரஸ்கள் இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ளதும்,தமிழ் நாட்டின் புத்தக நிலையங்கள் ஆர்டர் கொடுப்பதற்கேற்ப அவற்றின் பெயர்கள் அட்டைகளில் அச்சிட்டுத் தருவதும், அரபு நாட்டில் ஒட்டு மொத்தமாக சவுதி அரேபியாவில் குர் ஆனின் அச்சகம் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டிருப்பதும், அங்கிருந்தே அரபு மட்டும் அரபு அல்லாத நாடுகளுக்கும் குர் ஆன் அனுப்பப்படுவது உங்களுக்கும், எனக்கும் இந்த முஸ்லிம் நாத்திகர்களுக்கும் தெரியாததல்ல.
இந்த படா ஜஹ்ல்களின் செயல் விளைத்த விபரீதங்கள் சில.
நான் இமாமாக இருந்த ஒரு ஊர். அங்கு பள்ளிவாசல் திறப்பு விழா. அதில் சமூக நல்லிணக்க விழாவும் உண்டு. இந்துப் பிரமுகராக ஒரு அடிகளார். அவர் பேசும் முன் நினைவுப் பரிசுடன் பகுமானமாக ஒரு அரபி-தமிழ் குர் ஆன் ஒன்று கொடுக்கப்பட்டது. அதை வாங்கி விட்டு அவர் உதிர்த்த முத்துக்கள் இவை,
நான் இப்போது (குறித்துக் கொள்ளுங்கள் இப்போது) முஸ்லிம் விழாக்களுக்குப் போகும் போதெல்லாம் எனக்கு குர் ஆன் தரப்படுகிறது. இது என் லைப்ரரியில் 14 வது குர் ஆன். அடுத்த முரை என்னை அழைப்பவர்கள் தயவு செய்து என்னிடம் கேட்டு விட்டு புத்தகங்களை பரிசளியுங்கள். இதை விட நல்ல (குறித்துக்கொள்ளுங்கள்இதை விட நல்ல) புத்தகங்களை நான் கேட்டிருப்பேன்
சமீப காலமாக இணைய தளங்களில் அபூ ஜஹ்ல்களின்சாத்தான் ஒதும் வேதங்கள்நிரம்பிய பக்கங்கள் ஏராளமாக காணக் கிடைக்கின்றன. அதில் ஆன்லைன் படாஜஹ்ல் தளம் ரொம்ப ஃபேமஸ். காரணம் முஸ்லிம்களைத் திட்டுவதற்காக சில துவேசப் பதிவர்கள் ஆதாரத்துக்கு எடுத்தாள்வது இந்தப் பக்கங்களைத்தான்.
இங்கு குர் ஆன் ஹதீஸ் மானா வாரியாகக் கிடைக்கும். அரபி மூலம் கிடையாது. எவன் எழுதினான் என்ற குறிப்புக் கிடையாது. இதுதான் குர் ஆன். இதுதான் ஹதீஸ் என்ற திமிர் அதில் தொனிக்கும். எந்த ஆயத்துக்கும், ஹதீசுக்கும் விரிவான குறிப்பு ஏதும் கிடையாது. இதனால் என்ன லாபம் என்றால் படாஜஹ்ல்கள் சுன்னத் ஜமாத் மக்களை திட்டுவதற்கு இந்த மொக்கை குர் ஆன் ஹதீஸ் விளக்கங்களை பயன்படுத்துவது போல், முஸ்லிம் துவேஷிகள் இவர்களின் குர் ஆன் ஹதீஸ் விளக்கத்தாலேயே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மரியாதையை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாக்கிரதை!
குர் ஆனுக்கு மறந்தும் அவமரியாதையை செய்யாதீர்கள்!!
முஸ்லிம் நாத்திகர்கள் போல் நரகத்துக்கு இப்போதே ரிசர்வேஷன் செய்து விடாதீர்கள்!!!