Saturday, November 13, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 5

நெஞ்சில் தேன்மொழி
சிந்தும் தீன்மறை
நீங்கள் ஓதி வர- புவி
எங்கும் நன்னெறி
பூக்கும் ஏகனின்
நேசம் கூடி வர
உலகாளும் மன்னவனின்........ அருளும்......... மலரும்
அலை மோதிடும் இடர்களும்
விலகிடும் வரையினில்
(நெஞ்சில்.....)

மாயை சூழ்ந்த வையம்
மாற வேண்டுமென்று
ஹீராவிலே ரம்ஜானிலே
தந்தான் இறை செந்தேன் மறை!
உலகம் உள்ளவரை வழி காட்டும்
எங்கள் வண்ண மறை!
இதனைப் பயிலும் இதயம் தெளியும்
இரு லோகமும ஒளி பெற களிப்புற!
(நெஞ்சில்......)

தூய்மை ஞானப் பாதை
தூதுரைக்கும் வேதம்
மண் மூடினும் மறுமை வரை
காக்கும் துணை கலைமாமறை!
இருளில் ஒளி வழங்கும் இறை போதம்
ஒரு சொல் கோடி பெறும்!
இனிதே மொழியும் இதயம் தெளியும்
எழிலோங்கிடும் சிந்தனை பெருகிட!
(நெஞ்சில்.....)

(தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி......இசையில்)

0 comments:

Post a Comment