Saturday, October 30, 2010

"ஜம் ஜம்" நீர் தாய்மையின் சின்னம்!!!

ஐயாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு முன்....
பாரான் பள்ளத்தாக்கு எனப்படும் இன்றைய புனித மக்கா இருக்கும் பகுதியில் ஆள் அரவமற்ற நிலையில் கணவர் இப்ராஹீம் நபியால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு தாயும் மகனும்.
மகன் தாகத்திற்கு அழுகிறார். பச்சைக் குழந்தை அழுகுரல் எந்தத் தாயையும் பைத்தியமாக்கி விடும்தானே? சுற்று முற்றும் பார்க்கிறார்.
அதோ சபா மலைக் குன்றில் தண்ணீர் இருப்பது போல் தோற்றம்.
ஓடுகிறார்.
அது கானல் நீர்.
பக்கம் செல்லச்செல்ல அத்தண்ணீர் பார்வையில் இருந்து மறைய, மீண்டும் குழந்தையின் அழுகுரல் தாளாமல் மர்வா மலைக்குன்றை நோக்க, அங்கும் அதே கானல் காட்சி.
ஓடுகிறார்.
இல்லை.
மீண்டும் சபா. மீண்டும் மர்வா.
மொத்தம் ஏழு முறைகள்.
இதில் என்ன கொடுமை எனில் அந்த தள்ளாத வயதுக் கிழவி நடந்த போது அங்கே, நிழல் இல்லை. வெயிலோ உச்சத்தில். இரண்டு குன்றுகளுக்கும் இடையே, குழந்தையை பார்த்துக் கொண்டே நடக்கிறார். ஒரு நீண்ட பள்ளம் குறுக்கிடுகிறது. மேட்டில் இருக்கும் பிள்ளையை சீக்கிரம் காணும் ஆவலில் வயதை மீறி தள்ளாடித் தள்ளாடி ஓடுகிறார்.

ஏழு முறைகளிலும் இதே திரும்பத் திரும்ப. கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் அம்மாவும் உங்களின் மூன்று வயதுக்குள் இதே வடிவம்தான். பிள்ளை பெற்ற அம்மாமார்களை நீங்கள் கணவர்களாக இருந்தாலும், கவனித்ததுண்டா? பிள்ளை நடு நிசியில் அழுதால், எரிச்சல் பட்டு நீங்கள் கண்ணைத் திறக்கும் முன்பே பெற்றவள் உட்கார்ந்து அதை அமைதிப் படுத்துவதையோ, தொட்டில் ஆடிக் கொண்டிருப்பதையோ நீங்கள் காணலாம். பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை எனில், அது சரியாகும் வரை, கடன் உடன் வாங்கியாவது குணப்படுத்தும் வரை உங்கள் மனைவி ஓய்வேடுத்ததுண்டா?

உங்களின் ஏழு கழுதை வயதில் காணும் இந்த மனைவிக்காக நீங்கள் பரிதாபப் பட்டதுண்டா? ஆம் எனில் நீங்கள் உங்கள் சிறு வயதில் இப்படித்தான் உங்கள் தாயை கஷ்டப் படுத்தி இருப்பீர்கள் நினைவில் கொண்டு வந்து, அவரையும் இரக்கக் கண்ணோடு நோக்குங்கள்.
கண்ணால் காணும் மனைவிக்கே . பரிதாபப் படாதவரா நீங்கள்? உங்களை ரோபாட் ஐ விட மோசமானவாக நான் மதிக்கிறேன்.

மீண்டும் வாருங்கள்.
அந்தத் தாய் ஹாஜிராவின் தள்ளாத வயது தியாகம் இறைவனால் மதிக்கப் பட்டது. அதனால்,
  • ஜம் ஜம் நீர் குழந்தைக்கும் தாய்க்குமாய் ஊற்றெடுக்கச் செய்தான்.
  • ஹஜ்ஜுச் செய்யும் பொது ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த எழு ஓட்டத்தை (சயி) கடமை ஆக்கினான்.
  • அந்த ஏழு ஓட்டங்களிலும் ஆண்களுக்கு மட்டும் அந்த தாய் (ஹாஜிரா) பள்ளத்தில் ஓடிய இரண்டு மைல் பச்சை அடையாளம் இட்ட இடத்தில் கிழவி போலவே குலுங்கி குலுங்கி ஓடச் சொன்னான்.
காரணம் பெண்கள் பிள்ளை சுமப்பவர்கள். அவர்களுக்கு தாய்மை வலியை உணர்த்த வேண்டியதில்லை. ஆண்கள் மனைவிக்காக, சுகத்துக்காக, பொருளாதாரத்தை மிச்சப்படுத்த இப்படி பல காரணங்களால் தாயைப் புறக்கணிக்கிறார்கள். சபா மர்வா தொங்கோட்டம் ஆண்களுக்கு (சில பெண்களுக்கும்) தாய்மையை உணர்த்தும் பாடம். உங்களில் யாராவது ஹஜ் செய்தவர் அல்லது செய்த பெண் அம்மாவைப் புறக்கணிக்கிறார் என்றால் இது உறுதி,
அவர் ஹஜ் செய்யவில்லை. பிக்னிக் போய் வந்திருக்கிறார்.

Wednesday, October 27, 2010

என்ன பாவம் செய்தார்கள் முஸ்லிம்கள் ?

உச்ச நீதி மன்றத்துக்கு ஜனாதிபதி ஒரு விஷயத்தில் தீர்ப்பளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பிரச்னை என்னவென்றால், பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் அதற்கு முன்னர் இந்துக் கோவிலோ அல்லது வேறு ஏதாவது கட்டிடமோ இருந்ததா?
அந்தப் பிரச்சினையை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. அந்த நீதிபதிகளில் நானும் ஒருவன். அந்தப் பிரச்சினை பற்றி இப்போது பேசி புதைக்கப் பட்ட பழைய விஷயங்களை மீண்டும் வெளிக்கொணர வேண்டாம்.
அதற்கு முன் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை மத்திய அரசு கைப்பற்றுவது குறித்தும், அங்கே பார்த்தவர்கள் கரசேவகர்கள் பூஜை செய்வது குறித்தும் எழுந்த ஒரு பிரச்சினை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் m n வெங்கடாசலய்யா மற்றும் v n ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீது விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்டர்னி ஜெனரல் மீலன் பானர்ஜி வாதிடும் போது "தனக்கு கரசேவகர்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், எனவே கரசேவகர்களை சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
ஆனால் அதை, அவரது வாதத்தை உதாசீனம் செய்த உச்சநீதிமன்றம், கரசேவகர்கள் கூடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்திருக்காவிட்டால் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தடுக்கப்பட்டிருக்கும்.
உத்திரப் பிரதேச முதல்வர் கல்யான்சிங்கிற்கு ஒரு நாள் சிறை தண்டனை அளித்தது சரியாக ஆகாது.
“தற்போது அலஹாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தியின் உரிமை வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை படித்து அதிர்ச்சியடைந்தேன். அது ஒரு தீர்ப்பா என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது”.
சட்டத்தின் ஆளுமை மக்களாட்சி தத்துவம் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது.
-இது சமீபத்தில் டெல்லியில் நடந்த, "அலஹாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு" சம்பந்தமாக ஒரு கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ, எம். அஹமதி தெரிவித்த கருத்து.

மேற்க்கண்ட செய்தியில் சாதாரண பாமரன், எனக்குத் தெரியும் உண்மைகள்:
  • பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் உண்மையான விபரங்கள் அறிவார்ந்த நீதிபதிகளால் தெரிவிக்கப் பட்டவை சுத்தமாக புதைக்கப் பட்டிருக்கிறது.
  • காவி மனப்பான்மை நீதிபதிகளால் தீர்ப்பு கொடுக்கப்படும் பொது, அது நீதிக்கு எதிரானது என்று தெரிந்து, அதனால் பொது மக்கள் கொந்தளித்து விடக்கூடாது என்று, அவர்களின் கைகளைக் கட்டிப்போட சர்வாதிகார அரசாங்கத்தை விடக் கொடுமையாக போலிஸ் ராணுவம் என ஏவி, கடுமையான அடக்கு முறைகளைக் கையாண்டு அதை நசுக்க முனைவதும், அதுவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஆளுபவர்களின் (அது காங்கிரஸ் ஆயினும்) காவி முகமூடியை வெளிக்காட்டுவதும் தொடராக நடந்து வருவதை மேற்கண்ட பேச்சு ஞாபகப் படுத்துகிறது.
  • தடா, போடா என்ற பெயரிலான முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறை சட்டங்களுக்கு, ஒரு ஸ்கெட்ச் பேனா, ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு போஸ்டர், ஒரே ஒரு ஜெலட்டின் குச்சி இவைகளை போலிஸ் காரர்களையே வைத்து ஏற்பாடு செய்து, முஸ்லிம்களில் கைதுக்குரியவர்கள் லிஸ்ட் தயார் செய்து, அவர்களை நாடு இரவில் எழுப்பி, அவர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நிலையில் கைகளில் திணித்து, அன்றிலிருந்து நீங்கா சிறைவாசத்தில் அவர்களை சிக்க வைத்து அராஜகம நடத்தும் நீதி, மாநில அரசு கையில் இருக்கும் திமிரில் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க எல்லா உதவிகளையும் செய்த கல்யான்சிங் கிற்கு ஒரு நாள் சிறை என்ற காமெடித் தீர்ப்பும் வழங்கிய கொடுமையும் தெளிவாகிறது
  • ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று, ஹிந்துக்கள் நம்பியவன் ஏமாற்றும் போது நொந்து பொய் சொல்வது வழக்கம். அந்த ராமன் விஷயத்தில் கற்பனை ஜென்ம பூமிக்காக, இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட நாட்டுப் பற்று மிக்க முஸ்லிம்கள் இப்படி நொந்து கொள்கிறார்கள், " காங்கிரஸ் ஆண்டால் என்ன? பி.ஜே.பி ஆண்டால் என்ன? இஸ்லாமியர் இரண்டாம் தரக் குடிமக்கள்தானே?"
  •  உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே அலஹாபாத் தீர்ப்பு அதிர்ச்சி என்றால், நமக்கு.....?

Tuesday, October 26, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி-2)

கே 14 : அறியாமை கால இரண்டாம் வகை திருமணம் எப்படிப் பட்டது?
இது பெண்ணின் சாய்ஸ். ஒரு பெண் பல பேரிடம் தப்பாக நடப்பாள். தனக்கு ஒரு துணை போதும் என்ற நினைப்பு வரும் போது, அவர்கள் அனைவரையும் பஞ்சாயத்திற்கு அழைத்து, பொது மக்களுக்கு முன், "இவன் தான் என் வயிற்றுக் குழந்தைக்கு தகப்பன்" என்பாள். எல்லோரும் சேர்த்து (ஆவலுடன் தப்பாக நடந்தவர்களும் சேர்த்து (அப்பாடா! தலை தப்பித்தது!) ) அவனுடன் அவனை இணைத்து விடுவர்.

கே 15 : இதில் மற்றவர்கள் வெட்கப்பட மாட்டார்களா?
ஊரே அந்த மனநிலையில் இருக்கும்போது வெட்கப்பட என்ன இருக்கிறது? நம்முடைய காலத்தவர்கள் வாடகைத் தாய்மையை, சினிமாக்களிலும் சீரியல்களிலும், டாக்டர்களின் டாக் ஷோக்களிலும் சத்தம் போட்டு நியாயப் படுத்தவில்லையா? யார் வெட்கப் பட்டார்கள்? அது மாதிரிதான் இதுவும்.

கே 16 : இந்த வகை திருமணம் இப்போது நடைபெறுகிறதா?
பெரும்பாலும் அடங்காமல் நடக்கும் பெண்கள், (அந்த பலகீனத்தை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி சீரழிக்கும் ஆண்களுடன் தப்பாக நடந்து) என்றாவது கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும்போது. அதற்கு முன் அவளுடன் இருந்தவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக மாட்டியவனுடன் சில பஞ்சாயத்துக்களே அவளை சேர்த்து வைத்து விடுகின்றன.

கே 17 : அடுத்த வகை திருமணம் எப்படிப் பட்டது?
அதே போன்று பல பேரிடம் தவறாக நடக்கும் பெண், குழந்தை உருவாக்கி அதை பெற்றெடுத்தப் பின் தன்னிடம் தவறாக நடந்தவர்களையும், சாமுத்திரிகா லட்சணம் என்னும் ஜாடை அடையாளம் சரி காணும் நபரையும் அழைப்பாள்.
அவனிடம் அந்த ஆண்களை காட்டி, இவனில் யாருக்கு இக்குழந்தை பிறந்துள்ளது? என கேட்டு, அவன் கை காட்டும் நபரை மற்றவர்கள் துணையுடன் திருமணம் செய்து கொள்வாள்.

கே 18 : இத்திருமண முறை இப்போது நடைபெறுகிறதா?
ஆம். பழங்குடியினர் என்று அழைக்கப்படும் ஆதிவாசிகளில் சிலரிடம் சமுதாய அமைப்பிலேயே இப்படி நடைபெறுவதாக செய்திகள் சொல்கின்றன.

கே 19 : மேற்கண்ட மூன்று முறைகளில் திருமணம் செய்தவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
எப்படி இருக்க முடியும்? “விபச்சாரி, விபச்ச்சரகனைத் தவிர மற்றவர்களை திருமணம் செய்ய மாட்டாள். இது போலவே ஒரு விபச்சாரகன் விபச்சாரியைத் தவிர மற்றவர்களை திருமணம் செய்ய மாட்டான்” என அல்லாஹ்வே குர் ஆனில் தெளிவாக்கிய பிறகு, எப்படி அவர்களில் நல்லவர் இருக்க முடியும்?

கே 20 : நான்காவது வகைத் திருமணம் எப்படிப்பட்டது?
அது இப்போதைய திருமணம் போன்ற ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளையையோ, ஒரு மாப்பிள்ளைக்கு பெண்ணையோ பேசி,, இரு வீட்டாரும் கலந்து செய்யும் திருமணங்களும் வழக்கத்தில் இருந்தன. இஸ்லாமிய நெறியுடன் பின்னாளில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து தோழர்களின் திருமணங்களும், இஸ்லாம் வருவதற்கு முன்பே அப்படித்தான் நடந்திருந்தன. நபிகள் நாயகத்தின் முதாதையர் அத்துனைப் பேரின் திருமணங்களும் இப்படித்தான் நடந்திருந்தன.

கே 21 : இஸ்லாமியத் திருமணத்திற்கு தேவையானவை என்னென்ன?
மாப்பிள்ளை, பெண், பெண்ணின் பொறுப்பாளர் பெண்ணின் தகப்பனார் அல்லது சகோதர்கள் (இவர்களில் யாரும் உயிருடன் இல்லையெனில் அப்பெண்ணின் போஷகர்) இரண்டு சாட்சிகள், நடத்தி வைப்பவர் (காழீ) பெண்ணின் பொறுப்பாளர் விபரமானவராக இருப்பின் இப்பொறுப்புக்கு அவரே போதும். இக்காலத்தில் திருமண வாழ்க்கையின் நீளம் கம்மியாகிக்கொண்டே வருவதால் காழீ (நடத்தி வைப்பவர் அவசியமாகிறார்

கே 22 : இதற்கு முன்னுதாரணம் உண்டா?
ஆம். ஆரம்பத்தில் சஹாபாக்களின் திருமணங்கள் கூட நாலாம் பேருக்குத் தெரியாமல் நடந்ததுதான். இன்னொருவருக்கு பெண் பேச அனுப்பி வைக்கப்பட்டவரே, வீட்டுக்குள்ளிருந்து மாப்பிள்ளையாகத் திரும்பி வந்து முதலில் பெண் பேசப்பட்டவரிடம் வாழ்த்துப் பெற்ற சம்பவங்களும் உண்டு.
இரவில் திருமணம் முடித்து பகலில் ரசுலுல்லாஹ்விடம் அதை செய்தியாகத் தெரிவித்த சஹாபிகளும் உண்டு. பின்னாளில்தான் திருமணத்திற்க்காக அழைப்பு விடுத்துக் கொள்ளுங்கள். தப் அடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் திருமண சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தார்கள்.
(இந்தப் பகுதி என் மகள் பாத்திமா புஷ்ரா டைப் செய்தது)
....................... இனி இன்ஷா அல்லாஹ் 3 ம் பகுதியில்

Saturday, October 23, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி-1)

கே 1 : திருமணத்தின் நோக்கம் என்ன?
கற்பு நெறி காத்தல், இனவிருத்தியை ஆகுமான முறையில் நடத்துதல், சிறந்த சமுதாயம் உருவாக்குதல்.

கே 2 : இந்த நோக்கம் மனிதனுக்கு மட்டுமா?
ஆம். காரணம் மிருகங்களில் இனச்சேர்க்கை இயல்பானது. திட்டமிட்டதல்ல. முழுக்க முழுக்க இனவிருத்தி மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

கே 3 : திருமணம் என்ன மாற்றம் தருகிறது? (அல்லது) தர வேண்டும்?
திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. இன உறுப்புக்களை வரம்பு மீறாது பாதுகாக்கிறது.

கே 4 : திருமணம் செய்யாவிட்டால் (அல்லது) செய்து வைக்காவிட்டால்?
திருமண வயது வந்தப் பின் தன்னுடைய ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்காத பெற்றோருக்கு அப்பிள்ளைகள் வரம்பு மீறினால் ஏற்படும் தண்டனையில் முக்கிய பங்குண்டு.

கே 5 : உலகியல் திருமணம் எந்தெந்த காரணங்களுக்காக செய்யப் படுகிறது?
பணம், குடும்ப பெருமை, அழகு, (அதாவது மார்க்க பக்தி இவைகளின் கடைசி அம்சமாக்கியே உலகியல் திருமணம் நடை பெறுகிறது.)

கே 6 : இஸ்லாமியத் திருமணம் எதை பிரதானப்படுத்த வேண்டும்?
மார்க்க பக்தியுள்ள துணை அமைவதையே பிரதானப்படுத்த வேண்டும்.

கே 7 : அப்படியானால் மேற்கண்ட மூன்று விஷயங்களுக்காகவே திருமணம் செய்வதால் என்ன விளையும்?
பணத்துக்காக ஒரு பெண்ணை அல்லது மாப்பிள்ளையை முடித்தால், பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும். குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மணபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.
அழகுக்காக திருமணம் நடைபெறும்போது, காலம் மாற மாற அழகின் டிகிரியும் மாறும் பேது, சலனங்கள் அக்குடும்பத்தில் சஞ்சலங்கள் ஏற்படுத்தலாம். ஆனால் மார்க்க பக்திக்காக திருமணத்தை பிரதானப்படுத்தினால் அதுவே நல்ல குடும்பப் பாரம்பரியத்தையும், முக வசீகரத்தையும், போதும் என்கிற மன செழுமையையும் தரும். எதை இழந்தாலும் இறைவன் நாட்டம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும். குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மனபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.

கே 8 : நபிகளார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் முன் திருமணங்கள் எந்த அடிப்படையில் நடந்தன?
நான்கு வகையான திருமணங்கள் நடந்தன. முதல் வகை ஒரு பெண்ணை திருமணம் முடித்தவன், முதலிரவில் தன மனைவியை ஊரிலேயே பலசாலியான ஒருவனின் படுக்கைக்கு அனுப்பி வைப்பான். அவன் அனுபவித்தப்பின் தன்னோடு சேர்த்துக் கொள்வான். காரணம், சண்டை போடும் பரம்பரைக்குணம் போய்விடக்கூடாது என்பதற்காகவும், பலசாலியான வாரிசு வேண்டும் (அறிவில்லாவிட்டாலும் கூட) என்ற மனப்பான்மையினாலும் தான்

கே 9 : இப்போது இந்த வகை திருமணத்திற்கு உதாரணம் உண்டா?
ஆம். சில நவீன நாகரிகம் பேசுவோர், தன கணவன் உயிரணுக்கள் செத்த பிரவியாயிருக்கின்றன என்று, எப்படியாவது குழந்தை உருவாக யாரோ ஒரு மனிதனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை தன கர்ப்பபைக்குள் செலுத்திக் கொண்டு குழந்தை பெருகின்றனரே அது.

கே 10 : இது இஸ்லாத்தில் ஆகுமா?
ஆகாதல்லவா? பச்சை விபசாரமாயிற்றே?!

கே 11 : விஞ்ஞானத்தால் முடியும் என நிரூபிக்கப்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியுமா?
மறுக்க முடியாது. அதற்காக ஏற்க முடியாதே.

கே 12 : அப்படியானால் எதை ஏற்கலாம்?
கணவனின் உயிரணுக்களை ஊசி மூலம் எடுத்து அவன் மனைவிக்கே செலுத்தி குழந்தை பெற வைக்கும் முறையை ஏற்கலாம் ஏனெனில் உறவு கொள்வதால் உயிருக்கு ஆபத்து என பயந்தால் அல்லது உயிரணுக்கள் பலமாய் உள்ள கணவன் உறவு கோள்ளும் போது உயிரணுக்கள் நீர்த்துப் போய் விடுவதை பயந்தால் ஒரு வேளை கூடலாம்.
ஆனால் கணவனின் உயிரணுக்கள் ஊசியில் சேமிக்கப்பட அவன் கிளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் விந்தணுக்கள் சேமிப்பது சாத்தியம் என்றால் அதற்க்கு மனைவியுடனான உறவே பெட்டர். ஊசி மூலம் செலுத்தும் முறை ஆகாது. (ஐயோ! தலையே வெடித்து விடுகிறது) மொத்தத்தில் இறை நெறி ஒழுக்கத்திற்கு மாற்றமான எதுவும் ஹராம்தான்.

கே 13 : வாடகைத் தாய்மையை ஏற்கலாமா?
அதாவது ஒரு கணவனின் விந்தணுக்களையும் அவன் மனைவியின் கரு முட்டைகளையும் அந்த மனைவின் கர்ப்பப்பை குழந்தை சுமக்க முடியாத பலவீன நிலையிலுள்ளது என்பதற்காக பலமான கர்ப்பப்பை உள்ள பெண்ணுக்குள் செலுத்தி அவளை சுமக்கச் செய்து குழந்தை பெற வைப்பது, இதை விஞ்ஞான வளர்ச்சி என்பதை விட, விபச்சாரத்தின் வளர்ச்சி எனலாம். காரணம், கர்ப்பத்தில் சுமக்கும் பெண்ணின் அத்தனை குணங்களையும் தன வடிவாகப் பெரும் அக்குழந்தை எப்படி அந்த பிள்ளையில்லாத தாயின் பிள்ளையாகும்? வேண்டுமானால் உயிரணு கொடுத்த கணவனின் வைப்பாட்டியின் (வாடகைத் தாயின்) பிள்ளை என்று சொல்லலாமா?
இதற்கு அந்த வாடகைத் தாயையே திருமணம் செய்து குழந்தை பெறலாமே? விபரீதம் என்னவென்றால், ஒரு திருமணத்திற்கு மேல் செய்யாமல் இருப்பவனும் உத்தமனாம். இப்படி வாடகைத் தாய்மைக்காக தன உயிரணுக்களை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெண்ணுக்குள் விஞ்ஞானத்தின் பெயரால் செலுத்துபவனும் உத்தமனாம்!
தன் கர்ப்பப்பையை பல பேருக்கு வாடகைக்கு விடுபவள் பத்தினியாம். ஆனால் பல பேருடன் உறவு கொள்பவள் விபச்சாரியாம்! (என்ன! தலை சுற்றுகிறதா? ) இதுதான் இறை நெறிக்கு மாறான விஞ்ஞான வளர்ச்சி.

(இன்னும் ....... 2 ம் பகுதியில்)