Tuesday, July 26, 2011

இருக்கு........(பள்ளிக்கூடம்) ஆனா.... இல்லே........(பாடம்)

ஆட்சி மாற்றம் புரட்சித் தலைவியை மட்டுமல்ல், ஒரு வரலாறு காணாத புரட்சியையே கொண்டு வந்து விட்டது. ஆம்

150 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 5 ஆண்டு கால உழைப்பு, NCERT என்னும் மத்திய அரசு கல்வி மையத்தின் ஒப்புதல் (அதனாலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சென்ற வருடமே சமச்சீர் கல்வி ஆரம்பம், சர்வ தேச பாடப் புத்தக வெளியீட்டாளர்கல் சமச்சீர் புத்தகங்கள் அச்சிட்டுக் கொள்ள அரசிடம் அனுமதி வேண்டியது.........இருநூற்றுச் சொச்சம் கோடி செலவு)
இவை அனைத்தையும் கொஞசம் கூட சட்டை செய்யாமல், பள்ளிக்கூடம் உண்டு, ஆனால் பாடம் இல்லை புரட்சி இரண்டு மாதமாக நடக்கிறது.

காரணம் அதில் அய்யா (கலைஞர்) மூஞ்சி தெரிகிறது. ( செம்மொழிப் பாட்டாக, சுய புராணமாக, அய்யாவின் புத்திரி கனிமொழியின் லிமிடட் கம்பெனி சென்னை சங்கமத்தின் அறிமுகமாக) எப்படிப் பொறுக்கும் அம்மா மனம்...?
கல்வியே போனாலும் கவலையில்லை, மாணாக்கர்களின் மன உளைச்சல் அதிகமானாலும் கவலையில்லை என்று தன் மன வீரியத்திற்காக இரண்டு மாதக் கல்வியை காவு வாங்கியிருக்கிறார்.

நாம் கேட்பதெல்லாம் இதுதான்,

அம்மா வந்தால் தன் முகம் இருப்பதாலேயே சமச்சீர் புறக்கணிக்கப்படும் என்று முத்தமிழறிஞருக்கு தெரியாதா? மே மாதம் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்பதும், தேர்தல் முடிவு அப்போது வெளியாகும் என்பதும், ஒருவேளை தான் தோற்றுப் போனால் சமச்சீர் கல்வியையாவது காப்பாற்ற (இருநூற்றுச் சொச்சம் கோடியையும் சேர்த்து) மேற்கண்ட பிரதாபங்களை நீக்கியிருக்க வேண்டும்.

என்ன செய்ய...!

ஒரு அசாத்திய நம்பிக்கையில் தானே நிரந்தர முதல்வராக இருப்போம் என்ற கனவில் இவ்வளவு நஷ்டத்திற்கும் மறைமுக காரணமாக இருந்திருக்கிறார்.
அது சரி!

ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாவும் நினைக்கவில்லை.
ஆட்சி பறிபோகும் என்று அய்யாவும் எதிபார்க்கவில்லை.

இன்று அம்மா திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தனை தொங்கோட்டத்துக்குப் பின், தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில், "தான் செய்த சேட்டையை (அப்பீல் செய்ததை) பிரதிவாதிகள் செய்து, மக்கள் காரி கழிஞ்சு துப்புவதற்க்கு முன், தானே முன் வந்து, "அவர்கள் (முந்தய ஆட்சியாளர்கள்) நீதிமன்றம் மூலம் இக்கல்வியை கொண்டு வரவில்லை என்பதால் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தினோம். நீதிமன்றம் சொன்னால் அமல்படுத்துவோம்"

இப்படித்தானா என்று தெரியவில்லை. திடீருனு பிரதிவாதிகள் அப்பீல் செய்ய, அம்மா அப்பீல் செய்ய, பிள்ளைகள் பாடு கொண்டாட்டம்தான்.....!

அம்மா அடிமைகளும், ஊடக புலிகளும் இப்படிச் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை, "அம்மா அசாத்திய தீர்க்கதரிசி. ரொம்பக் காலமாக படிப்பின் பெயரால் பிள்ளைகள் விளையாட்டே இல்லாமல் அடிமையாக்கப் பட்டு விட்டனர். அம்மாவின் புண்ணியத்தில் ஒரு முழு வருடம் பள்ளிக்கூட அறையையே விளையாட்டு மைதானமாக்கி விட்டார்.

என்னே புரட்சி....!"

மொத்தத்தில் அய்யாவும் அம்மாவும் தமிழ் நாட்டு மக்களின் நிரந்தர ஆயுள் தண்டனையின் அடையாளங்கள் என்பது மட்டும் உண்மை......!

ஆலிம்கள் ஜாக்கிரதை....!

புதிய ஆலிம்களின் அணி மத்ரஸாக்களிலிருந்து சமுதாயப் பணிக்காக புறப்பட்டு விட்டது. தற்காலத்தில் இந்த ஆலிம்கள் மார்க்கப் பணிக்காகத்தான் வருகிறார்கள் என்று ஒட்டு மொத்தமாய் சொல்ல முடியாவிட்டால் கூட, அதில் ஒரு குழுவாவது மார்க்கப் பணியை நோக்கமாகக் கொண்டே மத்ரஸாவுக்கு வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றியே இப்பதிவு.
நண்பர்களே! உங்களின் இந்த ஆன்மிகப் பயணம் நீங்கள் திட்டமிட்டு செயலாற்றினால் சமுதாய மாற்றத்தை உண்டாக்கும். காரணம் ஆலிம்களை நம்பும் அளவு நமது சமுதாயம் யாரையும் நம்புவதில்லை. அது போன்றே ஆலிம் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புகிற அளவு வேறு யாரையும் விமர்சனம் செய்வதில்லை.
நபிகள் நாயகத்தின் சின்னச் சின்ன அசைவுகளும் ஆலிம்சாவிடத்திலாவது முழுமையாக இருக்க வேண்டும். அது நமது வாழ்வின் மாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயம் விரும்புகிறது.
அதனால்தான் தொப்பி போடாத ஆலிம்சாவை ஆலிமாகவே சமுதாயம் மதிப்பதில்லை. இது சுன்னத் ஜமாத் ஆலிம்களாகிய உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, பிரிவினை ஆலிம்சாக்களுக்குநன்றாக புரிந்திருக்கிறது. அதனால்தான் மவ்லித் ஓதாதே என்றும், கூட்டு து ஆ ஓதாதே என்றும், (சென்ற அல்ஹிந்தில் வந்தது போல் நபித்தோழர்களை இழிவுபடுத்து என்றும் ஒரு தொப்பி போட்ட ஆலிம்சா சொன்னதால்தான் எடுபட்டது. (பிரிவினைவாத ஆலிம்சாக்களிலும் தொப்பியே போடாதவர்கள் இருக்கிறார்களே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களெல்லாம் இந்த தொப்பி போட்ட ஆசாமி துப்பிய எச்சில்கள்) தொப்பி போடாதே என்று கூட தொப்பி போட்டுக்கொண்டே சொன்னதுதான் வேடிக்கை)
ஆலிம்களை சமுதாயம் உச்சி முதல் உள்ளங்கால் வரை மோப்பம் பிடிப்பதாக ஆலிம்கள் அலுத்துக் கொள்வதுண்டு. நான் அதை பெருமையாக எண்ணுகிறேன். காரணம், நான் நன்றாக இருக்க வேண்டும் எனறு எண்ணக்கூடிய, என்னை நல்லவனாகவே வைத்திருக்க எண்ணும் மக்களை என்னைச்சுற்றி வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். .
இனி புதிய ஆலிம்களுக்கு மட்டுமல்ல், ஜமா அதுல் உலமாவுக்கு எச்சரிக்கை தரும் செய்தி ஒன்று சொல்லப் போகிறேன்.
நான் மேலே சொன்னது போல, சமுதாயம் ஆலிம்களை, அதுவும் சுன்னத் ஜமாத் மத்ரஸாக்களிலிருந்து வெளிவரும் ஆலிம்களை மட்டுமே ஆலிமாக மதிக்கிறது என்பதால், ஷவ்வால் தொடங்கி, ஷஃபான் முடியும் வரை நடைபெறும் சன்மார்க்க மத்ரஸாக்களிலிருந்து (ஜூன் தொடங்கி, ஏப்ரல் வரை நடைபெறும் வெஸ்டர்ன் டைப் மத்ரஸாக்கள் அல்ல) வெளிவரும் ஆலிம்களை கொத்திச் செல்ல வித விதமான கூட்டங்கள் காத்திருக்கின்றன.
மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன், "சுன்னத் ஜமாத் மத்ரஸாக்களின் ஆலிம்கள் பெருமை, அந்த ஆலிம்களை விட, பிரிவினைவாத இயக்கங்களுக்குத்தான் நன்றாகத் தெரிகிறது". எனவே லேட்டஸ்ட்டாக ஒவ்வொரு இயக்கத்திலும் ஆலிம்கள் அணி உருவாக்கப்பட்டு, அதற்காக வலை வீசப்படுகிறது.
சில மாவட்ட ஜமா அத்துல் உலமா அமைப்பிலும் வித விதமான இயக்க ஆலிம்கள் இருப்பது வேதனையாக இருக்கிறது. வன்மையான வட்டாரத் தலைமை உள்ள அமைப்பில் இவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்பதும், இவர்களே பயப்படுவதும் நடக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
ஆனால் சில வட்டார சபைகளில் ரக ரகமான ஆலிம்சாக்கள் இருப்பது மனவேதனையை உண்டாக்குகிறது. (தவ்ஹீத் ஆலிம்சா, த மு மு க ஆலிம்சா, எம் என் பி ஆலிம்சா, ஐ எஃப் டி ஆலிம்சா இப்படி)
தயவு கூர்ந்து சுன்னத் ஜமாத் மத்ரசாக்களிலிருந்து வெளிவரும் புதிய ஆலிம்கள் இந்தக் கச்சடாக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தின்ற சோறுக்கு மக்களிடமும், பெற்ற கல்விக்கு துரோகம் செய்வதற்க்கு அல்லாஹ்விடமும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ஜமா அத்துல் உலமா தனக்குள்ளே புகுந்துள்ள பிரிவினை ஆலிம்களை (மன்பயீ, ஜமாலி, பாக்கவி, இம்தாதீ................ இப்படி) இனம் கண்டு வெளியேற்ற வேண்டும். இல்லையேல், 80 களில் ஜமா அத்துல் உலமாவையே ஃபோர்ஜரி பண்ண எண்ணி, அப்பெயரை களவாட எண்ணிய பிரிவினைவாதிகளிடம் இருந்து ஜமா அத்துல் உலமாவைக் காப்பாற்ற, "சுன்னத் வல் ஜமா அத் ஜமா அத்துல் உலமா" என்று ரெஜிஸ்டர் செய்ததற்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடும்.
ஜாக்கிரதை......................!!!