Tuesday, July 26, 2011

ஆலிம்கள் ஜாக்கிரதை....!

புதிய ஆலிம்களின் அணி மத்ரஸாக்களிலிருந்து சமுதாயப் பணிக்காக புறப்பட்டு விட்டது. தற்காலத்தில் இந்த ஆலிம்கள் மார்க்கப் பணிக்காகத்தான் வருகிறார்கள் என்று ஒட்டு மொத்தமாய் சொல்ல முடியாவிட்டால் கூட, அதில் ஒரு குழுவாவது மார்க்கப் பணியை நோக்கமாகக் கொண்டே மத்ரஸாவுக்கு வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றியே இப்பதிவு.
நண்பர்களே! உங்களின் இந்த ஆன்மிகப் பயணம் நீங்கள் திட்டமிட்டு செயலாற்றினால் சமுதாய மாற்றத்தை உண்டாக்கும். காரணம் ஆலிம்களை நம்பும் அளவு நமது சமுதாயம் யாரையும் நம்புவதில்லை. அது போன்றே ஆலிம் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புகிற அளவு வேறு யாரையும் விமர்சனம் செய்வதில்லை.
நபிகள் நாயகத்தின் சின்னச் சின்ன அசைவுகளும் ஆலிம்சாவிடத்திலாவது முழுமையாக இருக்க வேண்டும். அது நமது வாழ்வின் மாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயம் விரும்புகிறது.
அதனால்தான் தொப்பி போடாத ஆலிம்சாவை ஆலிமாகவே சமுதாயம் மதிப்பதில்லை. இது சுன்னத் ஜமாத் ஆலிம்களாகிய உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, பிரிவினை ஆலிம்சாக்களுக்குநன்றாக புரிந்திருக்கிறது. அதனால்தான் மவ்லித் ஓதாதே என்றும், கூட்டு து ஆ ஓதாதே என்றும், (சென்ற அல்ஹிந்தில் வந்தது போல் நபித்தோழர்களை இழிவுபடுத்து என்றும் ஒரு தொப்பி போட்ட ஆலிம்சா சொன்னதால்தான் எடுபட்டது. (பிரிவினைவாத ஆலிம்சாக்களிலும் தொப்பியே போடாதவர்கள் இருக்கிறார்களே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களெல்லாம் இந்த தொப்பி போட்ட ஆசாமி துப்பிய எச்சில்கள்) தொப்பி போடாதே என்று கூட தொப்பி போட்டுக்கொண்டே சொன்னதுதான் வேடிக்கை)
ஆலிம்களை சமுதாயம் உச்சி முதல் உள்ளங்கால் வரை மோப்பம் பிடிப்பதாக ஆலிம்கள் அலுத்துக் கொள்வதுண்டு. நான் அதை பெருமையாக எண்ணுகிறேன். காரணம், நான் நன்றாக இருக்க வேண்டும் எனறு எண்ணக்கூடிய, என்னை நல்லவனாகவே வைத்திருக்க எண்ணும் மக்களை என்னைச்சுற்றி வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். .
இனி புதிய ஆலிம்களுக்கு மட்டுமல்ல், ஜமா அதுல் உலமாவுக்கு எச்சரிக்கை தரும் செய்தி ஒன்று சொல்லப் போகிறேன்.
நான் மேலே சொன்னது போல, சமுதாயம் ஆலிம்களை, அதுவும் சுன்னத் ஜமாத் மத்ரஸாக்களிலிருந்து வெளிவரும் ஆலிம்களை மட்டுமே ஆலிமாக மதிக்கிறது என்பதால், ஷவ்வால் தொடங்கி, ஷஃபான் முடியும் வரை நடைபெறும் சன்மார்க்க மத்ரஸாக்களிலிருந்து (ஜூன் தொடங்கி, ஏப்ரல் வரை நடைபெறும் வெஸ்டர்ன் டைப் மத்ரஸாக்கள் அல்ல) வெளிவரும் ஆலிம்களை கொத்திச் செல்ல வித விதமான கூட்டங்கள் காத்திருக்கின்றன.
மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன், "சுன்னத் ஜமாத் மத்ரஸாக்களின் ஆலிம்கள் பெருமை, அந்த ஆலிம்களை விட, பிரிவினைவாத இயக்கங்களுக்குத்தான் நன்றாகத் தெரிகிறது". எனவே லேட்டஸ்ட்டாக ஒவ்வொரு இயக்கத்திலும் ஆலிம்கள் அணி உருவாக்கப்பட்டு, அதற்காக வலை வீசப்படுகிறது.
சில மாவட்ட ஜமா அத்துல் உலமா அமைப்பிலும் வித விதமான இயக்க ஆலிம்கள் இருப்பது வேதனையாக இருக்கிறது. வன்மையான வட்டாரத் தலைமை உள்ள அமைப்பில் இவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்பதும், இவர்களே பயப்படுவதும் நடக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
ஆனால் சில வட்டார சபைகளில் ரக ரகமான ஆலிம்சாக்கள் இருப்பது மனவேதனையை உண்டாக்குகிறது. (தவ்ஹீத் ஆலிம்சா, த மு மு க ஆலிம்சா, எம் என் பி ஆலிம்சா, ஐ எஃப் டி ஆலிம்சா இப்படி)
தயவு கூர்ந்து சுன்னத் ஜமாத் மத்ரசாக்களிலிருந்து வெளிவரும் புதிய ஆலிம்கள் இந்தக் கச்சடாக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தின்ற சோறுக்கு மக்களிடமும், பெற்ற கல்விக்கு துரோகம் செய்வதற்க்கு அல்லாஹ்விடமும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ஜமா அத்துல் உலமா தனக்குள்ளே புகுந்துள்ள பிரிவினை ஆலிம்களை (மன்பயீ, ஜமாலி, பாக்கவி, இம்தாதீ................ இப்படி) இனம் கண்டு வெளியேற்ற வேண்டும். இல்லையேல், 80 களில் ஜமா அத்துல் உலமாவையே ஃபோர்ஜரி பண்ண எண்ணி, அப்பெயரை களவாட எண்ணிய பிரிவினைவாதிகளிடம் இருந்து ஜமா அத்துல் உலமாவைக் காப்பாற்ற, "சுன்னத் வல் ஜமா அத் ஜமா அத்துல் உலமா" என்று ரெஜிஸ்டர் செய்ததற்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடும்.
ஜாக்கிரதை......................!!!

0 comments:

Post a Comment