Wednesday, September 12, 2012

குர் ஆனின் மரியாதையைக் கெடுத்த முஸ்லிம் நாத்திகர்கள்

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

அதென்ன முஸ்லிம் நாத்திகர்கள்?

முஸ்லிம் அல்லாத நாத்திகர்களுக்கு கடவுளே இல்லை. கடவுள் உண்டு என்பவர்களும், அந்தக் கடவுளுக்கு பல உருவங்கள் உண்டு என்பதும் ஆத்திகம்.

முஸ்லிம்களுக்கு கடவுள் உண்டு என்பதும். அவன் வரையறை அற்றவன் என்பதும், உருவமற்றவன் என்பதும் நம்பிக்கை.

ஆனால் முஸ்லிம் நாத்திகர்கள் வித்தியாசமானவர்கள். இவர்கள் முழுக்க முழுக்க தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் மட்டும் விஷமாகப் பரவியவர்கள். தங்களை தனி ஜாதியாகக் காட்டிக் கொள்வதிலே வினாடிக்கு வினாடி கவனமாக இருப்பவர்கள்உலகமே இருண்டு கிடக்கிறது. நாங்கள் மட்டும் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்பவர்கள்.

இவர்கள் வணங்கும் அல்லாஹ்வுக்கு கை உண்டு கால் உண்டு. கண் உண்டு. செவி உண்டு. மொத்தத்தில் உருவம் உண்டு. இல்லையானால் அவன் இல்லை என்பதை நிரூபிக்க பத்து வருஷமானாலும் தண்ணீர் குடிக்காமலே வாதம் செய்ய இவர்களுக்கென ஒரு குருமகா சன்னிதானம் உண்டு.

ஒரு தலைமுறைக் காலமாக தமிழ் சமுதாயத்தைப் பிடித்த இந்த நாத்திகர்களின் வெற்றி பெற்ற கொள்கைகளில் ஒன்று, “குர் ஆனும் குமுதமும் ஒன்று.” என்பது.
இதனால் முஸ்லிம் சமுதாயம் எவ்வளவு இழிவடைந்தது? என்பதே நான் இங்கு சொல்ல வந்தது.

அல்லாஹ் குர் ஆனின் அனைத்து சிறப்பு மற்றும் மரியாதைகளை விளக்கி,

இன்னஹு குர் ஆனுன் கரீம். ஃபீ கிதாபிம் மக்னூன். லா யமஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” - இது கண்ணியமிக்க குர் ஆன். இது பாதுகாக்கப் பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூள் பலகையில் இருக்கிறதுஇந்த குர் ஆனை பரிசுத்தமானவர்களைத் தவிர மற்றெவரும் தொட மாட்டார்கள்

ஒரு வேதம் முதலாவது தன் புனிதத்தை செவிட்டில் அறைகிறாற்போன்று பதிவு செய்தது குர் ஆன் மட்டும்தான். எனவேதான் இந்த வரையறையை ஒட்டியே 1400 ஆண்டுகளாக மலை சுமக்க முடியாத அளவு எண்ணப்பட்ட, பேசப்பட்ட, எழுதப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அத்தனை விளக்க உரைகளும், ”குர் ஆனைப் படிப்பதும், விளங்குவதும், குர் ஆனின் படி நடப்பதும் இரண்டாவது விஷயம்.

முதலில் அதை தொடுவதற்கே பரிசுத்தம் வேண்டும் என்று கூறி, சிறு தொடக்கு ஏற்பட்டவர்கள் ஒழு செய்யாமலும், பெருந்தொடக்கு ஏற்பட்டவர்கள் குளிக்காமலும் குர் ஆனைத் தொட ஷரீ அத் சட்டத்தில் தடையை ஃபிக்ஹ் சட்ட மேதைகள் தெளிவு படுத்தினர்.

ஆனால்,

முப்பது வருஷமாக இந்த முஸ்லிம் நாத்திகர்கள் தொடராக மீண்டும் மீண்டும் முதல் வரியில் நாம் சொன்ன ஆயத்துகளுக்கு சொன்ன விபரீத அர்த்தம் கிறிஸ்தவர்கள் யூதர்கள் திட்டம் போட்டு கெடுக்க முடியாத மரியாதையை கெட வைத்து, அல்லாஹ்வின் லஃனத்தை ஒட்டு மொத்தமாக சுமக்கச் செய்தது.

அப்படி என்னதான்  சொன்னார்கள்?

லவ்ஹுல் மஹ்ஃபூள் பலகையில் பாதுகாக்கப் பட்ட அந்தக் குர் ஆனை தூய்மையான மலக்குகள் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்பதுதான் அர்த்தம். காரணம் குர் ஆன் புத்தகமாக இறக்கப்படவில்லை என்பது சின்னப் பிள்ளைக்கும் தெரியும். அதுவும், நம் கையில் உள்ள குர் ஆன் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் சாதாரண வேலைக்காரன் கையில் புரண்டு அச்சடிக்கப்பட்டது. அவன் அச்சடிக்கும்போது ஒழுவோடு இருந்தானா? இருக்க வேண்டுமா? எனவே இந்தக் குர் ஆனை அல்லாஹ் சொல்லவே இல்லை. நம் கையில் உள்ள குர் ஆனை உழு இல்லாமலும் தொடலாம். மாதவிலக்கு உள்ள பெண்ணும் தொடலாம். குளிப்பு கடமையானவர்களும் தொடலாம்.

பாமர பாஷையில் கேணத்தனமான, கொஞ்சம் கோபத்தோடு சொன்னால் மொள்ளமாரித்தனமான இந்த விளக்கம் கேட்டு ஷைத்தான் முப்பது வருஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறான். நாம் கெடுக்க வேண்டிய கேடுதலை இந்த முஸ்லிம் நாத்திகர்கள் செய்தால் அவனுக்கு சந்தோஷம் வராதா?

குர் ஆனுக்கு விரிவுரை செய்ய எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், அணி இலக்கணம், பொருள் இலக்கணம், குர் ஆன் இறங்கிய வரலாறு, குர் ஆன் இறங்கிய காலத்தில் இருந்த மனிதர்களின் வரலாறு, முந்தைய வேதங்களின் வடிவத்துக்கும் குர் ஆனுக்கும் உள்ள வித்தியாசம், மாற்றப்பட்ட வசனம், மாற்றிய வசனம்..... இப்படி கணக்கிலடங்கா கலைகள் தெரிந்தவர்கள்தான் குர் ஆனுக்கு விரிவுரை செய்ய முடியும் என்பது மார்க்கக் கல்வியை முறையாகப் பயின்றவர்களுக்குத் தெரியும்.
படா ஜஹ்ல்கள் குர் ஆனுக்கு விரிவுரை எழுத வந்தால் என்ன நடக்கும்? அதுதான் நடந்திருக்கிறது.
முதலாவது, குர் ஆன் மலக்குகளுக்கான வேதம் அல்ல என்ற ஆரம்ப நிலை அரிச்சுவடி விளக்கமே முஸ்லிம் நாத்திகர்களின்பரிசுத்தமான மலக்குகளைத் தவிர எல்லா வகை அழுக்கான மனிதர்களும் தொடலாம்என்ற வாதத்தின் கழுத்தறுத்து விடுகிறது 
இரண்டாவது குர் ஆன் ஜிப்ரீல் மூலம் நபிகளாருக்கு வாய் மொழியாக இறங்கியது. என்வே எழுத்து சம்பந்தமான குர் ஆனுக்கு பரிசுத்தம் தேவையில்லை என்பது படா ஜஹ்ல்களின் கூற்று. இத்ற்கு கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
தவ்ராத் இஞ்சீல், ஜபூர் மூன்று வேதங்களும் புத்தகமாகவே இறங்கியது. காரணம் இறைவன் தன்னுடைய சட்டங்களை அந்த மனிதர்களுக்கு கட்டளையாகவே தந்ததால் அவர்கள் கேட்டு அல்லாஹ் வசனங்களை இறக்கவில்லை. ஆனால், குர் ஆன் முதலில்உங்களுக்கு நபியாக நான் அனுப்பிய இந்தத் தூதரை முதலில் படியுங்கள்.
அவர் 40 வருங்களாக உங்களுடனேயே வாழ்ந்தும், உங்களைப் போல் தப்பான செயல்கள் ஏதும் செய்தாரா? பொய், புறம், கோள் உபட விரும்பத்தகாத வார்த்தைகள் அவர் பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உங்களுக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கும் மனிதர் மனிதப் புனிதர் என்பதால் முதலில் அவரைப் படியுங்கள். நல்லதை எடுப்பதா? கெட்டதை விடுவதா? என்பதை அப்புறம் யோசிக்கலாம் என்பது போன்ற செய்திதான்இக்ரஃ மற்றுமுள்ள முதல் ஐந்து வசனங்கள் சொன்னது.
 அதிலும் எழுத்தின் அவசியமும், எழுதப்படுவதன் புனிதமும், எழுதப்பட்ட செய்திகளை மனிதனுக்கு அல்லாஹ் அறிவாக ஆக்கினான் என்ற சுட்டிக்காட்டலும், பின்னாளில் குர் ஆனை நானே எழுத்து வடிவமாக்குவேன் என்று முன்னுரை ஆக்கினான்.
சஹாபாக்கள் தெளிந்தார்கள். குடிக்கலாமா? அனாதைகள் விஷயத்தில் எப்படி நடப்பது? வாரிசு இல்லாத பெண்ணின் சொத்தை எப்படி பங்கிடுவது? ........ சரம் சரமான கேள்விகள். 23 வருடங்களில், மனிதர்கள் கேட்டுப்பெற்ற, திணிக்கப்படாத, அறிவுத் திறனற்றவர்களை அறிவின் உச்சமான கேள்வி கேட்க வைத்து பதில் சொல்லி, குர் ஆனாக கியாமத் நாள் வரை நிலைக்கச் செய்தான்.
அல்லாஹ்விற்கு வாய் மொழியின் மூலம் இறக்கி மனதில் பதிய வைப்பதுதான் குர் ஆனை இறக்கியதன் நோக்கம் என்றிருந்தால், குறைந்த பட்சம் முஸ்லிம்கள் அனைவரையும் ஹாஃபிஸ் ஆன திறன் பெற்றவர்களாக படைத்திருக்க வேண்டும்ஆனால் பிரபல்யமான சஹாபாக்களே ஹாஃபிஸ்களாக இல்லை என்பதில் இருந்து மனிதர்கள் கேட்டு இறைவன் இறக்கி வைத்து, மனன சக்தியுள்ளவர்களின் மனதில் பதிந்த குர் ஆன் முதற்படி என்றால், அது புத்தகமாக்கப்படவும் வேண்டும் என்பது அடுத்த படி.
ஏனெனில் அது லவ்ஹுல் மஹ்ஃபூள் புத்தகத்திலிருந்து ஒலி அலையாக இறக்கப்பட்டது. மீண்டும் அது உலகின் லவ்ஹுல் மஹ்ஃபூள் ஆக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் விதிதான்
இல்லையென்றால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கடைசிக் காலங்களில் நடந்த ஒன்றிரண்டு போர்களிலும், அபூபக்ர் சித்தீக் (ரழி) காலத்தைய போரிலும் ஹாஃபிஸ்களான சஹாபாக்களை கூட்டம் கூட்டமாக பலி கொடுக்க நேர்ந்ததும், அதன் பின், உமர்(ரழி) உள்ளத்தில், குர் ஆனை தொகுக்க வேண்டிய கட்டாயம் எச்சரிக்கை மணியாக அடித்ததும், அதை அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் சரிதான் என்று உள் வாங்கியதும், ஸைத் இப்னு ஃதாபித் குர் ஆன் தொகுப்பதன் களப் பணியாளராக இறங்கியதும் சாத்தியமே இல்லை.
ரஸூலுல்லாஹ்வைப் படைத்ததை, 40 வயது வரை பண்படுத்தியதை, அதை சொல்லிச் சொல்லி மாய்ந்தே நபிகளாரைப் பின்பற்றிய மனிதர்கள் சூழ்ந்திருக்க வைத்ததை, நபிப்பட்டம் தந்ததை, 13 வருடங்கள் முந்தைய வரலாறுகளையும்., அதனூடே தவ்ஹீத் கலிமாவை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி பண்படுத்தியதை, மதினாவின் பத்தாண்டுகளை அறிவுப் பல்கலைகழகங்களாக சஹாபாக்கள் உருவாகியதை லவ்ஹுல் மஹ்ஃபூளில் எழுதி வைத்த இறைவன், முஸ்லிம்கள் அனைவரையும் ஹாஃபிஸ் ஆக்காமல் அறிவுப் படித்த்ரத்தின் அடிப்படையில் மனிதர்களை உருவாக்கியதால், கியாமத் நாள் வரை குர் ஆன் பாதுகாக்கப்பட புத்தக வடிவத்தையும் லவ்ஹுல் மஹ்ஃபூள் போலவே பாதுகாக்க வழியமைத்தான்.
 இப்படி வரும். வர வேண்டும் என்று விரும்பியுள்ளான். இல்லையெனில், “அல்லஹ்வின் ரஸூல் செய்யாததை நீங்கள் எப்படிச் செய்யலாம்? என்று கேட்கப்பட்ட நேரங்களிலே உடனே ஏற்றுக் கொண்ட அபூபக்ர், உமர் (ரழி_ஹுமா) இருவரும் குர் ஆன் புத்தகமாக்கப்பட்ட விஷயத்தில் பிடிவாதமாக நின்றதன் அர்த்தம் என்ன?
இது, உமருடைய அறிவு  பிச்சை போட்டதால், யஹூதிகளுக்கு நஸ்ரானிகளுக்கு பிடித்த விரிவுரையில் புதுக் குர் ஆனை எழுதி அற்பக் காசுகளுக்கு விற்று வயிறு வளர்க்கும் படா ஜாஹில்களுக்குத் தெரியாதா?
குர் ஆனை யார் வெண்டுமானாலும் தொடலாம் என்றிருந்தால்தான் இஸ்லாமியர் அல்லாதவருக்கு குர் ஆனைத் தர முடியும். அவர்களும் நேர்வழி பெற முடியும் என்றெல்லாம் லாஜிக் பேசி, குர் ஆனை பிட்டு நோட்டீசை விடக் கேவலமாக விநியோகிக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களும் இதே போன்று மரியாதையை கேடுக்க வேண்டும் என்று, “கீழேயிருந்து ஒரு பேப்பரை அது குர் ஆன் பேப்பர்னு எடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள். அது அரபியிலுள்ள சினிமா பத்திரிகையா இருந்தா? நியூஸ் பேப்பரா இருந்தா? என்றெல்லாம் எகத்தாளம் பேசி, முஸ்லிம்கள் மத்தியிலும் குர் ஆனின் மரியாதையை எவ்வளவு கெடுக்க முடியுமோ, கெடுத்தார்கள்.
ஒரு முக்கிய விஷயம்:குர் ஆன் அச்சடிப்பத்ற்காக விஷேச ஏற்பாடுகளுடன் கூடிய பிரஸ்கள் இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ளதும்,தமிழ் நாட்டின் புத்தக நிலையங்கள் ஆர்டர் கொடுப்பதற்கேற்ப அவற்றின் பெயர்கள் அட்டைகளில் அச்சிட்டுத் தருவதும், அரபு நாட்டில் ஒட்டு மொத்தமாக சவுதி அரேபியாவில் குர் ஆனின் அச்சகம் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டிருப்பதும், அங்கிருந்தே அரபு மட்டும் அரபு அல்லாத நாடுகளுக்கும் குர் ஆன் அனுப்பப்படுவது உங்களுக்கும், எனக்கும் இந்த முஸ்லிம் நாத்திகர்களுக்கும் தெரியாததல்ல.
இந்த படா ஜஹ்ல்களின் செயல் விளைத்த விபரீதங்கள் சில.
நான் இமாமாக இருந்த ஒரு ஊர். அங்கு பள்ளிவாசல் திறப்பு விழா. அதில் சமூக நல்லிணக்க விழாவும் உண்டு. இந்துப் பிரமுகராக ஒரு அடிகளார். அவர் பேசும் முன் நினைவுப் பரிசுடன் பகுமானமாக ஒரு அரபி-தமிழ் குர் ஆன் ஒன்று கொடுக்கப்பட்டது. அதை வாங்கி விட்டு அவர் உதிர்த்த முத்துக்கள் இவை,
நான் இப்போது (குறித்துக் கொள்ளுங்கள் இப்போது) முஸ்லிம் விழாக்களுக்குப் போகும் போதெல்லாம் எனக்கு குர் ஆன் தரப்படுகிறது. இது என் லைப்ரரியில் 14 வது குர் ஆன். அடுத்த முரை என்னை அழைப்பவர்கள் தயவு செய்து என்னிடம் கேட்டு விட்டு புத்தகங்களை பரிசளியுங்கள். இதை விட நல்ல (குறித்துக்கொள்ளுங்கள்இதை விட நல்ல) புத்தகங்களை நான் கேட்டிருப்பேன்
சமீப காலமாக இணைய தளங்களில் அபூ ஜஹ்ல்களின்சாத்தான் ஒதும் வேதங்கள்நிரம்பிய பக்கங்கள் ஏராளமாக காணக் கிடைக்கின்றன. அதில் ஆன்லைன் படாஜஹ்ல் தளம் ரொம்ப ஃபேமஸ். காரணம் முஸ்லிம்களைத் திட்டுவதற்காக சில துவேசப் பதிவர்கள் ஆதாரத்துக்கு எடுத்தாள்வது இந்தப் பக்கங்களைத்தான்.
இங்கு குர் ஆன் ஹதீஸ் மானா வாரியாகக் கிடைக்கும். அரபி மூலம் கிடையாது. எவன் எழுதினான் என்ற குறிப்புக் கிடையாது. இதுதான் குர் ஆன். இதுதான் ஹதீஸ் என்ற திமிர் அதில் தொனிக்கும். எந்த ஆயத்துக்கும், ஹதீசுக்கும் விரிவான குறிப்பு ஏதும் கிடையாது. இதனால் என்ன லாபம் என்றால் படாஜஹ்ல்கள் சுன்னத் ஜமாத் மக்களை திட்டுவதற்கு இந்த மொக்கை குர் ஆன் ஹதீஸ் விளக்கங்களை பயன்படுத்துவது போல், முஸ்லிம் துவேஷிகள் இவர்களின் குர் ஆன் ஹதீஸ் விளக்கத்தாலேயே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மரியாதையை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாக்கிரதை!
குர் ஆனுக்கு மறந்தும் அவமரியாதையை செய்யாதீர்கள்!!
முஸ்லிம் நாத்திகர்கள் போல் நரகத்துக்கு இப்போதே ரிசர்வேஷன் செய்து விடாதீர்கள்!!!

0 comments:

Post a Comment