Monday, February 7, 2011

மீண்டும் மீண்டும் மீலாத்!!!!!!!?

ஆஹா! இன்னொரு மீலாத்!
வருடா வருடம் மீலாத் கொண்டாடி என்னய்யா கண்டீங்க? இப்படி சில பேர்.
பேசுனதத்தானய்யா பேசுறாய்ங்க? இப்படி சில பேர்.
இதெல்லாம் அவசியமா? இன்னும் சில அறிவாளிகள்.
கேக்க நல்லாத்தான் இருக்கு. என்ன செய்ய? வருசா வருஷம் மீலாது நடத்தியுமே, வருசா வருஷம் இஸ்லாமை நினைவு படுத்தியுமே, கொஞ்ச கொஞ்சமா இஸ்லாமை அழிச்சிக்கிட்டு வர்றீங்களே? நீங்களாய்யா மீலாதைப் பத்தி குறை பேசுறீங்க?
மீலாதையே கெடுத்தவங்க சில பேர். குறிப்பா இஸ்லாமிய அரசியல் வா(வியா)திகள். அம்மாவுக்காக, அய்யாவுக்காக இஸ்லாமையே குர்பானி கொடுத்த தியாகிங்க! வெட்கக்கேடு!
நம்ம ஆளுங்களுக்கு திடீருன்னு புத்தி வரும். ஆலிம்சாக்கள் அலுத்துப் போய் தங்கள் அரசியல் சார்ந்த அரை வேக்காடு முஸ்லிமைக் கூப்பிட்டால் தலைமைக்கும் உச்சி குளிரும். நம்ம யாவாரமும் நடக்கும். இப்படி எண்ணத்தில் அழைப்பதுண்டு. ஆலிம்சாக்கள் அழைக்கப் பட்டால், "எங்க ஊரிலே ராத்திரி எட்டு மணிக்குதான் மக்கள் வருவாங்க. ஒரு ஏழு மணிக்கு ஆரம்பிச்சு, பத்து மணிக்கு முடிப்போம். ஒரு ஒன்பது மணி வாக்கில நீங்க வந்தா போதும்" என்று பேரம் பேசும் விழாக்குழு,
அரசியல்வாதி கிட்டே, "நீங்க டயம் கொடுங்கண்ணே!" என்று பவ்வியமாகப் பேசி, அந்தப் பெரிய மனிதர், "நைட்ல எனக்கு வேற மீட்டிங் இருக்குது. நீங்க சாயந்திரம் அஞ்சுமணிக்கு தொடங்கிடுங்க நான் ஆறு மணிக்கு வந்து, ஒரு ஏழு மணிக்குப் பேசிட்டு எட்டு மணிக்கெல்லாம் கெளம்பி விடுகிறேன்" என்று நேரம் கொடுக்க, அவரை எதிர்பார்த்து அசர் வக்த் குளோஸ்.
அவர் வந்த பின், கூட்டம் ஆரம்பித்து அல்லாவுக்கு பயந்து மக்ரிப் இஷா இடைவேளை விட்டாலும், வந்திருக்கும் முஸ்லிம் பெயர் தாங்கி பிரபலத்துக்கு, அதெல்லாம் அவர் இமேஜுக்கு ஒத்து வராத விஷயம் என்பதால், அவர் தொழுகையும், அவர் புண்ணியத்தால் ஒரு நூறு பேர் தொழுகையும் மண்ணாகி,.................,
தொழுகையை வலியுறுத்தும் விழாவிலேயே தொழுகை மண்ணோடு மண்ணாகிஇப்படி ஒரு ஸ்டைல் மீலாத்.
இன்னொரு ஸ்டைல், இங்கு பேச்சாளர் ஆலிமாகத்தான் இருக்கும். ஆனால் வசூலில் இருந்து, வழி நடத்துவது வரை இளைஞர்கள் என்பதால் அரசியல் வாதியின் மீலாதில் கண்ட காட்சியில் ஒரு மாற்றம். அங்கு தொண்டர்களும், தலைவரும் சேர்ந்து மட்டம் போட்ட தொழுகையை இங்கு மீலாத் வேலை பிசியில் இளைஞர்கள் மட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். சில குறிப்பிட்ட ஊர்களில் மீலாதுக்கு சம்பந்தமில்லாத கச்சேரி நடத்துவதும் இந்த துடிப்பான(?) இளைஞர் கூட்டம்தான்.
          இதிலே வேடிக்கை என்னன்னா, இந்த இளைஞர்கள் நடத்துற கூட்டங்களில், அல்லது அரசியல்வாதி நடத்தும் மீலாத் அலங்கோலங்களில் அதை கண்டித்துப் பேசும் ஆலிம்களையே அவமரியாதை செய்யும் இளைஞர்கள்,
கடனை உடனை வாங்கி அரபு நாடு போய், ஒரு அஞ்சு வருஷம் கழிச்சி திரும்பி வந்தா, எவனோ தப்பு தப்பா பேசுனத கேட்டு அறிவு வந்து, "மீலாதெல்லாம் நடத்தக் கூடாது. அது நபி வழி இல்லை. அது இது என்று தத்துவம் பேச, நமக்கே சந்தேகம் வரும்.
"நம்ம மென்டலா? இவன் மென்டலா? மீலாத் விழாவை கெடுத்ததே இவன்தான். இவனெல்லாம் மார்க்கம் பேசுனா......?"
அல்லாஹ்தான் இந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அல்லது இவர்களிடமிருந்து இஸ்லாமை காப்பாற்ற வேண்டும்.
உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். ஒரு குரு போதனை செய்து கொண்டிருந்தார். மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இடை இடையே ஒரு பூனை குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தது. குரு அமைதியாக இருந்தாலும், மக்கள் அதன் பக்கம் கவனம் செலுத்த, அந்த குருவின் சிஷ்யன் ஒருவன் அந்தப் பூனையை ஒரு தூணில் பிடித்துக் கட்டினான். மக்கள் குருவின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதன் பிறகு ஒவ்வொரு நாளும் அந்தப் பூனையை தூணில் கட்டுவது வழக்கமாயிற்று.
இது மாதிரித்தான் மீலாத் விழாக்களும்.
நபிகள் நாதரின் காலமும், சஹாபாக்களின் காலமும், இமாம்களின் காலமும், முஹத்திசீன்களின் காலமும் இஸ்லாம் தேவையான அளவு அன்றாட வாழ்வில் கலந்த ஒன்றாகவே இருந்தது. பிந்தைய காலம், உலகத்துக்காக இஸ்லாம் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு, ஆளாளுக்கு இஸ்லாமை சின்னாபின்னப் படுத்த முனைந்த போது, “எனக்கு இது போதும், அது போதும், வேறெதையும் நான் கேட்க மாட்டேன். பார்க்க மாட்டேன்என இஸ்லாம் கூறு போடப்பட்ட வேளை, இஸ்லாமை நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு நினைவு படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன் விளைவாக பல முயற்சிகள் ஏற்பட்டது. அதில் ஒன்றுதான் மீலாத்.
 நபிகள் நாயகம் (ஸல்) பிறந்ததும், மறைந்ததும் ஒரே நாள் என்பதாலும், .உங்களின் சலாம் ஒவ்வொரு முறையும் எனக்கு இறைவனால் எடுத்துச் சொல்லப் படுகிறது என்னும் நபிகளாரின் வாக்கை அடிப்படையாய்க் கொண்டும், அவர்களின் பிறப்பு பின்னாளில் உமர் கத்தாப் (ரழி) காலத்தில் இஸ்லாமிய வருடக் கணக்கு நிர்ணயிக்கப் பட்ட காலத்திலும் நினைக்கப்பட்டதை வைத்தும் மீலாத் விழா ஏற்படுத்தப் பட்டது.
இது இஸ்லாமின் கவனம் முஸ்லிம்களிடம் சிதறாமல் இருக்கவும், (அங்குமிங்கும் அலைந்த பூனை சீடர்களால் கட்டிப் போடப்பட்டது போல்) இன்னும், ஆளாளுக்கு லட்சங்களை சேர்க்க, கோடிகளை சேர்க்க இஸ்லாமை பயன்படுத்தி குழப்ப வாதம் செய்யும் இக்காலத்திற்கு தேவை என்பதாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரசூலுல்லாஹ்வே எனது மீலாதை நினையுங்கள் என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் நான் ஏற்றுக் கொள்வேன்என்று யாராவது சொன்னால், அவர்கள் இஸ்லாமிய அரை வேக்காடு நடிகர் நாசருக்கு சமமானவர்கள்.
ஏனென்றால் அவர்தான் சொன்னார்,
"சினிமா 100  வருசத்தில் வந்தது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்தது. நபிகள் நாயகம் எப்படி சினிமாவைப் பற்றி சொல்ல முடியும்?
லாஜிக்கான கேள்வி இல்லே?
ஆமாம். ஆனால்,
"அடுத்தவன் மனைவியை நடிப்பு என்ற பெயரால் பெண்டாளுவது, ஆபாசக் கிடங்காக ஒரு சமுதாயத்தை உருவாக்க முனைவது, சமுதாயக் கேவலங்களை தைரியமாகச் செய்ய வைத்து மேலும் மேலும் குற்றவாளிகளை உருவாக்குவது, படுக்கையறை நடவடிக்கைகளை வீதிக்குக் கொண்டு வருவது எக்செட்ரா.... எக்செட்ரா..... இவைகளை புத்திக்குறைவான ஒருவன் கூட ஹராம் என்று சொல்ல முடியுமே?
இஸ்லாம், மனிதன் தனக்குத்தானே எதை அருவெறுப்பாகக் கருதுவானோ, அதைத்தானே ஹராம் என்கிறது? சினிமா அதில் ஒன்று இல்லையா?” என்று எப்படி நடிகர் நாசரிடம் விளக்க முடியாதோ, அல்லது அதை விளங்கும் அறிவை எதையாவது செய்து துட்டு பார்ப்பது என்ற எண்ணம் மறைத்துள்ளதோ,
அது மாதிரி இஸ்லாமிய அறிவு குறைவானவர்களிடம், மீலாது சம்பந்தமாக மேற்கண்ட விளக்கங்களை கூற முடியாது. அல்லது அதை விளங்கும் அறிவு அவர்களுக்குக் கிடையாது.
அவ்வளவுதான்.