Tuesday, July 26, 2011

இருக்கு........(பள்ளிக்கூடம்) ஆனா.... இல்லே........(பாடம்)

ஆட்சி மாற்றம் புரட்சித் தலைவியை மட்டுமல்ல், ஒரு வரலாறு காணாத புரட்சியையே கொண்டு வந்து விட்டது. ஆம்

150 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 5 ஆண்டு கால உழைப்பு, NCERT என்னும் மத்திய அரசு கல்வி மையத்தின் ஒப்புதல் (அதனாலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சென்ற வருடமே சமச்சீர் கல்வி ஆரம்பம், சர்வ தேச பாடப் புத்தக வெளியீட்டாளர்கல் சமச்சீர் புத்தகங்கள் அச்சிட்டுக் கொள்ள அரசிடம் அனுமதி வேண்டியது.........இருநூற்றுச் சொச்சம் கோடி செலவு)
இவை அனைத்தையும் கொஞசம் கூட சட்டை செய்யாமல், பள்ளிக்கூடம் உண்டு, ஆனால் பாடம் இல்லை புரட்சி இரண்டு மாதமாக நடக்கிறது.

காரணம் அதில் அய்யா (கலைஞர்) மூஞ்சி தெரிகிறது. ( செம்மொழிப் பாட்டாக, சுய புராணமாக, அய்யாவின் புத்திரி கனிமொழியின் லிமிடட் கம்பெனி சென்னை சங்கமத்தின் அறிமுகமாக) எப்படிப் பொறுக்கும் அம்மா மனம்...?
கல்வியே போனாலும் கவலையில்லை, மாணாக்கர்களின் மன உளைச்சல் அதிகமானாலும் கவலையில்லை என்று தன் மன வீரியத்திற்காக இரண்டு மாதக் கல்வியை காவு வாங்கியிருக்கிறார்.

நாம் கேட்பதெல்லாம் இதுதான்,

அம்மா வந்தால் தன் முகம் இருப்பதாலேயே சமச்சீர் புறக்கணிக்கப்படும் என்று முத்தமிழறிஞருக்கு தெரியாதா? மே மாதம் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்பதும், தேர்தல் முடிவு அப்போது வெளியாகும் என்பதும், ஒருவேளை தான் தோற்றுப் போனால் சமச்சீர் கல்வியையாவது காப்பாற்ற (இருநூற்றுச் சொச்சம் கோடியையும் சேர்த்து) மேற்கண்ட பிரதாபங்களை நீக்கியிருக்க வேண்டும்.

என்ன செய்ய...!

ஒரு அசாத்திய நம்பிக்கையில் தானே நிரந்தர முதல்வராக இருப்போம் என்ற கனவில் இவ்வளவு நஷ்டத்திற்கும் மறைமுக காரணமாக இருந்திருக்கிறார்.
அது சரி!

ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாவும் நினைக்கவில்லை.
ஆட்சி பறிபோகும் என்று அய்யாவும் எதிபார்க்கவில்லை.

இன்று அம்மா திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தனை தொங்கோட்டத்துக்குப் பின், தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில், "தான் செய்த சேட்டையை (அப்பீல் செய்ததை) பிரதிவாதிகள் செய்து, மக்கள் காரி கழிஞ்சு துப்புவதற்க்கு முன், தானே முன் வந்து, "அவர்கள் (முந்தய ஆட்சியாளர்கள்) நீதிமன்றம் மூலம் இக்கல்வியை கொண்டு வரவில்லை என்பதால் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தினோம். நீதிமன்றம் சொன்னால் அமல்படுத்துவோம்"

இப்படித்தானா என்று தெரியவில்லை. திடீருனு பிரதிவாதிகள் அப்பீல் செய்ய, அம்மா அப்பீல் செய்ய, பிள்ளைகள் பாடு கொண்டாட்டம்தான்.....!

அம்மா அடிமைகளும், ஊடக புலிகளும் இப்படிச் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை, "அம்மா அசாத்திய தீர்க்கதரிசி. ரொம்பக் காலமாக படிப்பின் பெயரால் பிள்ளைகள் விளையாட்டே இல்லாமல் அடிமையாக்கப் பட்டு விட்டனர். அம்மாவின் புண்ணியத்தில் ஒரு முழு வருடம் பள்ளிக்கூட அறையையே விளையாட்டு மைதானமாக்கி விட்டார்.

என்னே புரட்சி....!"

மொத்தத்தில் அய்யாவும் அம்மாவும் தமிழ் நாட்டு மக்களின் நிரந்தர ஆயுள் தண்டனையின் அடையாளங்கள் என்பது மட்டும் உண்மை......!

0 comments:

Post a Comment