Thursday, November 11, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 4

வானேறிச் செல்கின்ற மேகங்களே- நபி
வரலாற்றினை எங்கும் சொல்லுங்களேன்!
பூஞ்சோலை தன்னில் மின்னும் புஷ்பங்களே -எங்கள்
பூமான் நபி புகழ் பாடுங்களேன்!
(வானேறிச்.................)

பெற்றோர் துணையிழந்த பாலர் நபி- சிறு
பாவமும் புரியாத சீலர் நபி!
கற்றோர் மனம் விரும்பும் தூதர் நபி- திருக்
குர் ஆனை எமக்கீந்த நாதர் நபி!
திருக்குர் ஆனை எமக்கீந்த நாதர் நபி!
(வானேறிச்.................)

மாறாதிருக்கும் மறை வழி காக்கவே - எங்கள்
மா நபி களம் சென்று போராடினார்
தீராதிருக்கும் தீய நெறி போக்கவே- நபி
தீனோர்க்கு அருள் பொங்கும் வழி காட்டினார்!
நபி தீனோர்க்கு அருள் பொங்கும் வழி காட்டினார்
(வானேறிச்.................)

தென்றல் சுமந்து செல்லும் பாங்கோசையில் -தினம்
தெவிட்டாமல் தவழ்கின்ற திருப்பேரது!
தேடும் இதயங்களின் தாகம் இது- எம்
திருத்தூதர் புகழோதும் ராகம் இது!
எங்கள் திருத்தூதர் புகழோதும் ராகம் இது!
(வானேறிச்.................)

(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....!- இசையில்)

0 comments:

Post a Comment