Thursday, November 25, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள்- 6

காபா ஆலயத்தின்
எழில் கண்ட சீலரை
வரவேற்கும் தீனின் பாமாலை!
(காபா.......)

அருளே சிந்தும் நிலத்தில்
உங்கள் பாதம் நடந்தது.
அன்பு நபிகள் துயிலும் தளத்தில்
உங்கள் பார்வை படிந்தது.
வழிகள் தோறும் அக மகிழ்ந்து
வல்ல நாயன் அருள் சுமந்து
வாழ்ந்த சீலரை
வரவேற்கும் தீனின் பாமாலை!
(காபா.......)

அந்த காபா நிழலில் இறையை
உங்கள் இதயம் துதித்தது.
அதன் பொருட்டால் இந்த மண்ணில்
பேரின்பம் உதித்தது.
கல்வி தேடும் பாலகர்க்கு
கரங்கள் ஏந்தி இறைஞ்சுதற்கு
நாடும் நேசரை
வரவேற்கும் தீனின் பாமாலை
(காபா......)

(வெள்ளி நிலாவினிலே............. என்ற இசையில்)

0 comments:

Post a Comment