Sunday, May 27, 2012

இது அறிவுடைமையா?-

அல்ஹிந்த் மார்ச் இதழில் ரஹ்மான் பிலாலியின் கட்டுரையில் வலிமார்களின் தர்ஹாக்களில் நடைபெறும் சந்தனக்கூட்டை அதன் ஆரம்ப வரலாற்றுடன் எழுதியிருந்தார்.ஆம். சரிதான். மக்கள் மாற்று மத அறிஞர்களின் கதா காலட்சேபத்துக்கும், தேர்த்திருவிழாக்களுக்கும் முஸ்லிம் ஏன்ற அடையாளத்துடன் சென்று வந்த அறியாமையை அகற்றி, மார்க்கத்தின் பக்கம் கவனம் திருப்ப செய்த முயற்சிகளில் ஏராளமான நல்ல முயற்சிகள் உண்டு. அதை நாமும் ஆதரிக்கிறோம். சீறாபுராணம், நூறு மஸலா போல. அவைகள் முழுக்க முழுக்க இஸ்லாமிய மணம் கமழ்பவை. ஹதீசிலும் கூட அந்த முயற்சிகள் ஆதரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் முழுக்க முழுக்க மாற்று மத ஜாடை கொண்ட சந்தனக்கூட்டையும் ஆதரித்து அதற்கும் தெய்வீக அடையாளம் கொடுப்பதும், அது இரவெல்லாம் ஊர் சுற்றுவதை ஒரு இபாதத்தைப் போல் விழித்திருந்து எதிர்பார்ப்பதும், அதன் மேல்பூக்களைத் தூவுவதை பாவ விமோச்சனமாகக் கருதுவதும், அதன் மேல் ஒருவர் இருந்து மக்களிடம் இருந்து ஒன்றைப் பெற்று அதற்குப் பதில் இன்னொன்றை புனிதப் பொருளாகத் தருவது  ....... என்ன இது? நியாயப்படுத்துவதற்க்கும் ஒரு அளவில்லையா?
எங்கள் இராமநாதபுரத்தில் ஒருகிராமத்தில் உள்ள கோவிலில் செவ்வய்க்கிழமையில் எது வேண்டினாலும் நடக்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமியப் பெண்கள் சிலர் கூட வந்து, வேண்டிய கொடுமையை அகற்ற, கீழக்கரைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தர்காவில் செவ்வாய்க்கிழமை மட்டும் விஷேசம் என்று கதை கட்டி, கூட்டம் கூட்டமாக மக்களைச் சேர்த்த கொடுமை நடந்தது. அதற்காக மஞ்சள் சோறும் அவிச்ச முட்டையும்தான் வைக்கும் நிபந்தனையுடன் (அது ஒரு ரிலே ரேஸ் வியாபாரமாக) நடந்தது அனைவருக்கும் தெரியும்.
வழி கெட்டவன் ஒன்றை மறுக்கிறான் என்பதற்காக அது கெட்டதாக இருந்தாலும் ஆதரிக்க வெண்டும் என்பது அறிவுடைமையா? இன்னொன்று அலி மியான் அவர்கள் மக்கள் கூடுவதை ஆதரித்திருக்கலாம். சந்தனக்கூட்டை ஆதரித்தார்கள் என்பதெல்லாம் ஓவர். ஆனால் மக்கள் கூடும் விஷயத்திலும் ஆரோக்கியமான ஏற்பாடுகள் தேவை.
 Reply Forward

0 comments:

Post a Comment